Friday, September 12, 2014

On Friday, September 12, 2014 by Unknown in ,    



சென்னை: தீபாவளிக்கு கடந்த ஆண்டைப் போலவே அதிகளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை எழும்புரில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறியுள்ளார். சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ராகேஷ்மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே அதிக விபத்துகள் நடைபெறுகின்றன என்றும் மிஸ்ரா தெரிவித்துள்ளார். விபத்துக்களைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ரயில்வேயில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தேவையான நிதி இல்லை என்று ராகேஷ்மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

0 comments: