Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
காந்தி ஜெயந்தி தினத் தன்று மது விற்றதாக நீலகிரி மாவட்டத்தில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத் தில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் சங்கர் உத்தர விட்டு இருந்தார்.
இதன்படி மதுக்கடைகள் மற்றும் பார் கள் மூடப்பட்டு இருந்தன. இருப்பினும் ஊட்டி, குன் னூர், கோத்தகிரி, குந்தா, கூட லூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று காந்தி ஜெயந்தி தினத் தன்று விற்பனை செய்ததாக 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மதுவிலக்கு போலீசார் கூறியதாவது:- நீலகிரி மாவட் டத்தில் காந்தி ஜெயந்தி தினத் தன்று மது விற்றதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கூடலூரில் முஸ்தபா என்பவரிடம் இருந்து 33 மது பாட்டில்கள் உள்பட மொத் தம் 150 மது பாட்டில்களை பறிமுதல் செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 comments: