Wednesday, October 15, 2014

மதுரை அருகே திருமங்கலத்தில் கடந்த 2002–ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, புலவர் செவந்தியப்பன் உள்பட 9 பேர் விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதாக அவர்கள் மீது கியூ பிரிவு போலீசார் பொடா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. பல கட்ட விசாரணைக்கு பின் நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விசாரித்து பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த 2002–ம் ஆண்டு திருமங்கலம் பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் விடுதலை புலிகளை பற்றி பேசியதை தான் இங்கும் பேசினேன். இதனால் எங்கள் மீது அப்போதைய அ.தி.மு.க. அரசு பொடா வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து நான் திரும்பியபோது என்னை கைது செய்தனர். அதை நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்தோம். பொடா கோர்ட்டில் நானே வாதாடினேன். இதை தொடர்ந்து நீதிபதி சகாரியா தலைமையில் மறு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அவர் ஆய்வு செய்து வைகோ மற்றும் அவரது சகாக்கள் மீது பொடா வழக்கு போட எந்த முகாந்திரமும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு இந்திய வரலாற்றில் முக்கியமானதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment