Wednesday, October 15, 2014

மதுரை அருகே திருமங்கலத்தில் கடந்த 2002–ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, புலவர் செவந்தியப்பன் உள்பட 9 பேர் விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதாக அவர்கள் மீது கியூ பிரிவு போலீசார் பொடா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. பல கட்ட விசாரணைக்கு பின் நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விசாரித்து பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த 2002–ம் ஆண்டு திருமங்கலம் பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் விடுதலை புலிகளை பற்றி பேசியதை தான் இங்கும் பேசினேன். இதனால் எங்கள் மீது அப்போதைய அ.தி.மு.க. அரசு பொடா வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து நான் திரும்பியபோது என்னை கைது செய்தனர். அதை நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்தோம். பொடா கோர்ட்டில் நானே வாதாடினேன். இதை தொடர்ந்து நீதிபதி சகாரியா தலைமையில் மறு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அவர் ஆய்வு செய்து வைகோ மற்றும் அவரது சகாக்கள் மீது பொடா வழக்கு போட எந்த முகாந்திரமும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு இந்திய வரலாற்றில் முக்கியமானதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment