Wednesday, October 15, 2014

மதுரை அருகே திருமங்கலத்தில் கடந்த 2002–ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, புலவர் செவந்தியப்பன் உள்பட 9 பேர் விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதாக அவர்கள் மீது கியூ பிரிவு போலீசார் பொடா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. பல கட்ட விசாரணைக்கு பின் நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விசாரித்து பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த 2002–ம் ஆண்டு திருமங்கலம் பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் விடுதலை புலிகளை பற்றி பேசியதை தான் இங்கும் பேசினேன். இதனால் எங்கள் மீது அப்போதைய அ.தி.மு.க. அரசு பொடா வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து நான் திரும்பியபோது என்னை கைது செய்தனர். அதை நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்தோம். பொடா கோர்ட்டில் நானே வாதாடினேன். இதை தொடர்ந்து நீதிபதி சகாரியா தலைமையில் மறு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அவர் ஆய்வு செய்து வைகோ மற்றும் அவரது சகாக்கள் மீது பொடா வழக்கு போட எந்த முகாந்திரமும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு இந்திய வரலாற்றில் முக்கியமானதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment