Wednesday, October 15, 2014
மதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு
பணம் அனுப்பப்படுகின்றது. இதில் பலமுறை கள்ள நோட்டுகள் வருவதாக ரிசர்வ்
வங்கி புகார் கூறி வருகிறது.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் 50–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதனால் மதுரையில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 2 வாலிபர்கள் ஒரு கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்று கைதானார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளனவா? என தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை வங்கியில் இருந்து சமீபத்தில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தில் 3 ஐந்நூறு ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்ததாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரி மதுரை குற்றப்பிரிவு போலீசில் மீண்டும் புகார் செய்தார். தொடர்ந்து மதுரை வங்கிகளில் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகள் வருவதால் இவை எங்கிருந்து வருகின்றன. எவ்வளவு நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளன என்பது ‘மர்ம’மாக உள்ளது.
இதை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment