Monday, October 27, 2014
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 2,448 ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது.இதில் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், பல்வேறு பள்ளிகளில் நடந்த முகாம்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைதொடர்ந்து, பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகின்ற நவம்பர் 10ம் தேதிவரை, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி நடைபெறும். பெயர் சேர்க்க படிவம் 6ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7ம், விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8ம், பட்டியல் பதிவை இடமாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகிய படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊராட்சி சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்ட பிறந்த தேதி சான்று அல்லது பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ் நகல்கள் அல்லது பெற்றோரின் உறுதிமொழி சான்றுகளை, படிவம் 6 வுடன் இணைத்து, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வருகின்ற 2015 ஜனவரி 1ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தியடைபவர்கள் புதிதாக பெயர் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். தொழிலாளர்கள் நலன் கருதி, விடுமுறை நாளான நேற்று, மாவட்டம் முழுவதுமும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை நடந்த இந்த முகாமில், இளைஞர்களும், பொதுமக்களும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம், படிவம் பெற்று, பூர்த்தி செய்து வழங்கினர். குறிப்பாக, புதிதாக பெயர் சேர்ப்பதற்காக, விண்ணப்ப படிவம் 6, அதிக அளவில் பெற்று பூர்த்தி செய்து வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், வரும் நவம்பர் 2ம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, நவம்பர் 10 வரை, அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் படிவங்கள் பெறப்படும்.
இந்த படிவங்களை பரிசீலானை செய்து 2015 ஜனவரி 5ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, புதிதாக பெயர் சேர்க்கும் வாக்காளர்களுக்கு, ஜன., 25 முதல் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் குமார்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பல்லடம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வஞ்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, காமநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமினை ஆய்வு செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
விடிய விடிய பெய்த மழையால் பல வீடுகளில் முன்புறம் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. திருப்பூர் நகரில் மைய...

0 comments:
Post a Comment