Monday, October 27, 2014
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 2,448 ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது.இதில் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், பல்வேறு பள்ளிகளில் நடந்த முகாம்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைதொடர்ந்து, பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகின்ற நவம்பர் 10ம் தேதிவரை, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி நடைபெறும். பெயர் சேர்க்க படிவம் 6ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7ம், விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8ம், பட்டியல் பதிவை இடமாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகிய படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊராட்சி சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்ட பிறந்த தேதி சான்று அல்லது பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ் நகல்கள் அல்லது பெற்றோரின் உறுதிமொழி சான்றுகளை, படிவம் 6 வுடன் இணைத்து, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வருகின்ற 2015 ஜனவரி 1ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தியடைபவர்கள் புதிதாக பெயர் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். தொழிலாளர்கள் நலன் கருதி, விடுமுறை நாளான நேற்று, மாவட்டம் முழுவதுமும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை நடந்த இந்த முகாமில், இளைஞர்களும், பொதுமக்களும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம், படிவம் பெற்று, பூர்த்தி செய்து வழங்கினர். குறிப்பாக, புதிதாக பெயர் சேர்ப்பதற்காக, விண்ணப்ப படிவம் 6, அதிக அளவில் பெற்று பூர்த்தி செய்து வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், வரும் நவம்பர் 2ம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, நவம்பர் 10 வரை, அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் படிவங்கள் பெறப்படும்.
இந்த படிவங்களை பரிசீலானை செய்து 2015 ஜனவரி 5ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, புதிதாக பெயர் சேர்க்கும் வாக்காளர்களுக்கு, ஜன., 25 முதல் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் குமார்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பல்லடம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வஞ்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, காமநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமினை ஆய்வு செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment