Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

நங்கவரம் பண்ணை சார்பாக கலவை உரக்கிடங்கிற்கு 1 ஏக்கர் நிலம் நன்கொடை                                                                               கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் உரக்கிடங்கு அமைக்க போதுமான இடம் இல்லாததால் நங்கவரம் பண்ணையின் தலைவர் பாலா, செயலாளர் ராஜகோபால் ஆகியோரிடம் இடம் ஒதுக்கித் தர கோரப்பட்டது. இதன்பேரில் நங்கவரம் தெற்கு பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை நங்கவரம் பேரூராட்சிக்கு தானமாக பதிவு செய்து அதுதொடர்பான பத்திரம் மற்றும் ஆவணங்களை கலெக்டர் ஜெயந்தியிடம் நேற்று ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் நங்கவரம் பேரூராட்சி தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் முத்து, செயல் அலுவலர் உமாராணி, முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் கலந்து கொண்டனர்    

0 comments: