Saturday, November 08, 2014
பசுபதிபாளைய பாலப்பணி தாமதம் பொதுமக்கள் கடும் அவதி பாமக குற்றச்சாட்டு பசுபதிபாளையம் பாலப்பணியை செய்யாமல் காலம் தாழ்த்துவது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருவதாக பாமக குற்றம் சாட்டியுள்ளது.கரூர் மாவட்ட பாமக நிர்வாககுழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில துணை பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் விஜயகுமார், சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சண்முகம், யுவராஜ், ராமச்சந்திரன், கார்த்திக், புகழேந்தி, பாஸ்கரன், மூர்த்தி, சாதிக்அலி, முருகன், பழனிசாமி, தாந்தோணிஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வரலாறு காணாத அளவுக்கு தமிழக அரசு பால் விலையை உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன், பால்விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், மின்சார கட்டண உயர்வை கண்டிப்பது, இலங்கையில் பொய்வழக்கு போட்டு5 அப்பாவி தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து இருப்பது கொடும்பாவ செயல், மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக அவர்களை மீட்டு வரவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று கரூர் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வாங்கல் வாகன போக்குவரத்து பாலத்தை உடனடியாக கட்டிமுடிக்க வேண்டும். பசுபதிபாளையம் பாலப்பணியை செய்யாமல் காலம் தாழ்த்துவது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்குகிறது. இதனை வன்மையாக கண்டிப்பது, கரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீர்தேங்கி நிற்கிறது.இதனால் நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மருத்துவ முகாம் நடத்தவேண்டும். வரும் 10ம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கையை நிறைவு செய்வது, நவம்பர் 14ம் தேதி கரூர் மாவட்டத்தில் பால்விலைஉயர்வு, மின்கட்டண உயர்வு, மதுபானக் கடைகளை அகற்றாதது போன்றவற்றை கண்டித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment