Saturday, November 08, 2014
பசுபதிபாளைய பாலப்பணி தாமதம் பொதுமக்கள் கடும் அவதி பாமக குற்றச்சாட்டு பசுபதிபாளையம் பாலப்பணியை செய்யாமல் காலம் தாழ்த்துவது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருவதாக பாமக குற்றம் சாட்டியுள்ளது.கரூர் மாவட்ட பாமக நிர்வாககுழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில துணை பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் விஜயகுமார், சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சண்முகம், யுவராஜ், ராமச்சந்திரன், கார்த்திக், புகழேந்தி, பாஸ்கரன், மூர்த்தி, சாதிக்அலி, முருகன், பழனிசாமி, தாந்தோணிஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வரலாறு காணாத அளவுக்கு தமிழக அரசு பால் விலையை உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன், பால்விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், மின்சார கட்டண உயர்வை கண்டிப்பது, இலங்கையில் பொய்வழக்கு போட்டு5 அப்பாவி தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து இருப்பது கொடும்பாவ செயல், மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக அவர்களை மீட்டு வரவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று கரூர் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வாங்கல் வாகன போக்குவரத்து பாலத்தை உடனடியாக கட்டிமுடிக்க வேண்டும். பசுபதிபாளையம் பாலப்பணியை செய்யாமல் காலம் தாழ்த்துவது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்குகிறது. இதனை வன்மையாக கண்டிப்பது, கரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீர்தேங்கி நிற்கிறது.இதனால் நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மருத்துவ முகாம் நடத்தவேண்டும். வரும் 10ம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கையை நிறைவு செய்வது, நவம்பர் 14ம் தேதி கரூர் மாவட்டத்தில் பால்விலைஉயர்வு, மின்கட்டண உயர்வு, மதுபானக் கடைகளை அகற்றாதது போன்றவற்றை கண்டித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment