Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

கரூரில் 16ம் தேதி தேசிய நூலக வாரவிழா சதுரங்க போட்டி                                                                      கரூர் :  47வது தேசிய நூலக வாரவிழாவையொ ட்டி கரூர் மாவட்ட கரூர் மாவட்ட மைய நூலக வாச கர் வட்டமும், கரூர் மாவ ட்ட சதுரங்க கழகமும் இணைந்து கரூர் மாவட்ட அள விலான சதுரங்கபோட்டி யை வரும் 16ம் தேதி (ஞாயி று) காலை 9மணிக்கு கரூர் கோவைசாலை விஎன்சி மகாலில் நடத்துகிறது. 

இந்த சதுரங்க போட்டி மாணவ, மாணவிகள் பிரிவு,  வாசகர்கள் பிரிவு(ஓபன்) என 2 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. 9வயது, 12வயது, 15வயதுக்குட்பட்டோருக் கும், வாசகர்களுக்கு வயது வரம்பில்லாமலும் நடத்தப்படுகிறது. கரூர் மாவட்ட சது ரங்க வீரர், வீராங்கனைகள் மட்டுமே இதில் கலந்து கொள்ளலாம். 4 முதல் 10வரை யிலான இடங்களை பெறுவோருக்கு அன்றே பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு நூலக வார விழாவில் பரிசளிக்கப்படும். எனவே மாணவ மாணவிகள், வாசகர்கள் போட்டியில் பங்கேற்குமாறு கரூர் மாவட்ட மைய நூலக அலுவலர் சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 comments: