Saturday, November 08, 2014
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்தி அருகேயுள்ள விசுவநாதபுரி ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 83 மனுக்கள் பெறப்பட்டது.க.பரமத்தி ஒன்றியம் விசுவநாதபுரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. கோட்டாட்சியர் தலைமையிலான இந்த முகாம் தொடக்க விழாவில் க.பரமத்தி ஆர்ஐ சௌந்தரவள்ளி வரவேற்றார். அரவக்குறிச்சி தாசில்தார் உதயகுமார் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சிவகுமார், ஊராட்சி துணைத் தலைவர் ராமாயி பழனிச்சாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகி கருப்பண்ணன் முன்னிலை வகித்தனர். முகாமை ஊராட்சி தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார். முகாமில் வாரிசு சான்றிதழ், இலவச வீட்டுமனை பட்டா, வீட்டு பட்டா மனு, முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் உதவித் தொகை, புதிய ரேஷன் கார்டு, விதவை, கணவரால் கைவிடப்பட்ட மக்கள் உள்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 83 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் மனுக்களை பெற்று கொண்ட அரவக்குறிச்சி தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் இந்த மாத இறுதியில் அனைத்து மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்றார். முகாமில் விஏஓவினர் கதிர்வேல், வேலாயுதம் கோபாலகிருஷ்ணன், சசிகலா, வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விசுவநாதபுரி விஏஓ (பொ) வேலாயுதம் நன்றி கூறினார். |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment