Saturday, November 08, 2014
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்தி அருகேயுள்ள விசுவநாதபுரி ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 83 மனுக்கள் பெறப்பட்டது.க.பரமத்தி ஒன்றியம் விசுவநாதபுரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. கோட்டாட்சியர் தலைமையிலான இந்த முகாம் தொடக்க விழாவில் க.பரமத்தி ஆர்ஐ சௌந்தரவள்ளி வரவேற்றார். அரவக்குறிச்சி தாசில்தார் உதயகுமார் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சிவகுமார், ஊராட்சி துணைத் தலைவர் ராமாயி பழனிச்சாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகி கருப்பண்ணன் முன்னிலை வகித்தனர். முகாமை ஊராட்சி தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார். முகாமில் வாரிசு சான்றிதழ், இலவச வீட்டுமனை பட்டா, வீட்டு பட்டா மனு, முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் உதவித் தொகை, புதிய ரேஷன் கார்டு, விதவை, கணவரால் கைவிடப்பட்ட மக்கள் உள்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 83 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் மனுக்களை பெற்று கொண்ட அரவக்குறிச்சி தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் இந்த மாத இறுதியில் அனைத்து மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்றார். முகாமில் விஏஓவினர் கதிர்வேல், வேலாயுதம் கோபாலகிருஷ்ணன், சசிகலா, வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விசுவநாதபுரி விஏஓ (பொ) வேலாயுதம் நன்றி கூறினார். |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment