Saturday, November 08, 2014
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்தி அருகேயுள்ள விசுவநாதபுரி ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 83 மனுக்கள் பெறப்பட்டது.க.பரமத்தி ஒன்றியம் விசுவநாதபுரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. கோட்டாட்சியர் தலைமையிலான இந்த முகாம் தொடக்க விழாவில் க.பரமத்தி ஆர்ஐ சௌந்தரவள்ளி வரவேற்றார். அரவக்குறிச்சி தாசில்தார் உதயகுமார் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சிவகுமார், ஊராட்சி துணைத் தலைவர் ராமாயி பழனிச்சாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகி கருப்பண்ணன் முன்னிலை வகித்தனர். முகாமை ஊராட்சி தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார். முகாமில் வாரிசு சான்றிதழ், இலவச வீட்டுமனை பட்டா, வீட்டு பட்டா மனு, முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் உதவித் தொகை, புதிய ரேஷன் கார்டு, விதவை, கணவரால் கைவிடப்பட்ட மக்கள் உள்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 83 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் மனுக்களை பெற்று கொண்ட அரவக்குறிச்சி தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் இந்த மாத இறுதியில் அனைத்து மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்றார். முகாமில் விஏஓவினர் கதிர்வேல், வேலாயுதம் கோபாலகிருஷ்ணன், சசிகலா, வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விசுவநாதபுரி விஏஓ (பொ) வேலாயுதம் நன்றி கூறினார். |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment