Saturday, November 08, 2014
கல்லூரி மாணவர்கள் 2 பேர் காவிரியில் மூழ்கினர் கரூர் அருகேயுள்ள மாயனூர் காவிரி கதவணையில் குளித்த கல்லூரி மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் புலியூர் செல்வநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கார்த்திக் (20). இவர் கரூர் தனியார் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கோகுல் பிரசாத் (21) இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நண்பரான கார்த்திக் (21) ஆகியோர் நேற்று மதியம் 3 மணியளவில் பைக்கில் மாயனூர் கதவணைக்கு குளிக்க சென்றனர். ஆபத் தான பகுதி என்பதால் அங் கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது மறுகரையில் உள்ள 3 ஷட்டர்களில் மட்டும் தண்ணீர் வெ ளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிக்கு 3 பேரும் சென்றனர். கரையில் பைக்கை நிறுத்தி விட்டு கார்த்திக்கும், கோகுல்பிரசாத்தும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைக்கண்ட கரையில் இருந்த கார்த்திக் அவர்களை காப்பாற்ற உதவி கேட்டு சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து கரூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர். இரவு வரை மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment