Saturday, November 08, 2014
கல்லூரி மாணவர்கள் 2 பேர் காவிரியில் மூழ்கினர் கரூர் அருகேயுள்ள மாயனூர் காவிரி கதவணையில் குளித்த கல்லூரி மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் புலியூர் செல்வநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கார்த்திக் (20). இவர் கரூர் தனியார் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கோகுல் பிரசாத் (21) இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நண்பரான கார்த்திக் (21) ஆகியோர் நேற்று மதியம் 3 மணியளவில் பைக்கில் மாயனூர் கதவணைக்கு குளிக்க சென்றனர். ஆபத் தான பகுதி என்பதால் அங் கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது மறுகரையில் உள்ள 3 ஷட்டர்களில் மட்டும் தண்ணீர் வெ ளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிக்கு 3 பேரும் சென்றனர். கரையில் பைக்கை நிறுத்தி விட்டு கார்த்திக்கும், கோகுல்பிரசாத்தும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைக்கண்ட கரையில் இருந்த கார்த்திக் அவர்களை காப்பாற்ற உதவி கேட்டு சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து கரூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர். இரவு வரை மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment