Monday, November 03, 2014

காங்கிரஸ் கட்சியை உடைத்து ஜி.கே.வாசன் உருவாக்கும் புதிய கட்சி, தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் கூட்டணி மாற்றங்களுக்கு அச்சாரமிடும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது காங்கிரசில் உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாசன் பக்கம் இருப்பார்கள் என்று கருதப்படுவதால், வாசனை தங்கள் பக்கம் இழுக்க இப்போதே கட்சிகள் போட்டா போட்டியில் இறங்கி விட்டன.
புதிய கட்சிக்கு தலைமை ஏற்று இருக்கும் ஜி.கே.வாசனுக்கு எல்லா கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். மூப்பனார் போலவே வாசனும் மற்ற கட்சியினருடன் நன்கு பழகியுள்ளார். தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும், யாரையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்து பேசியதே இல்லை.
இந்த பண்பு வாசனுக்கு இப்போது கை கொடுத்துள்ளது. வாசனை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டால் காங்கிரஸ் ஓட்டுக்களை பெற முடியும் என்று பெரும்பாலான கட்சிக்காரர்கள் நினைக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு அவர்கள் கடந்த 2 நாட்களாக வாசனுடன் ரகசியமாக பேசி வருவதாக தெரிய வந்துள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தான் முதல் நபராக வாசனுடன் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் வாசனிடம், உறுதியான முடிவு எடுத்து உத்வேகத்துடன் செயல்படுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
அதுபோல பா.ம.க., ம.தி.மு.க. தரப்பில் இருந்தும் வாசனுக்கு வாழ்த்துக்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட நட்பு ரீதியாக வாசனை தொடர்பு கொண்டு புதிய கட்சி குறித்து பேசி வாழ்த்தியதோடு சில அறிவுரைகளையும் கூறியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பாரதீய ஜனதா தேசிய தலைவர்களும் ஜி.கே.வாசனின் புதிய கட்சி தொடக்கத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் வாசனுடன் தொடர்பில் இருப்பதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் வாசனை வளைத்துப் போடுவதில் தீவிரமாக உள்ளன. 2016–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய கூட்டணி ஏற்படுத்த வாசனின் வருகை உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வட்டாரத்திலும் வாசனை அரவணைக்க சில தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் வாசன் அ.தி.மு.க. கூட்டணி அல்லது தி.மு.க. கூட்டணியில் சேருவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
பா.ஜ.க., தே.மு.தி.க.வின் கூட்டணியில் அவர் இடம் பெறக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. வாசனின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மூலம் அவர் எந்த கூட்டணி பக்கம் செல்வார் என்பது தெரிந்து விடும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment