Saturday, November 29, 2014
திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்துள்ள ஆத்துப்பாளையம் ஐ.ஜி.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் புஷ்பராஜ் (42). இவர் இதே பகுதியில் சாயப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் இருந்து ஆர்டரின் பேரில் பெற்று பனியன் ரோல்களுக்கு சாயப்பட்டறையில் சாயமேற்றி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பனியன் ரோல்களுக்கு சாயமிட்டு சாயப்பட்டறையின் முன்புறம் காலி இடத்தில் உள்ள கம்பிகளில் 48 பனியன் ரோல்களை காய போட்டிருந்தார்.
நேற்றுக்காலை வந்து பார்த்தபோது 40 பனியன் ரோல்கள் மட்டுமே இருந்தது. இரவில் யாரோ மர்ம மனிதர்கள் 8 பனியன் ரோல்களை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். சாயப்பட்டறையில் பொருத்தி இருந்த சி.சி.டிவி.கேமராவில் பார்த்தபோது மர்ம நபர்கள் ஒரு காரில் வந்து சென்றது பதிவாகி இருந்தது. இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சாயப்பட்டறையில் காயப்போட்டிருந்த பனியன் ரோல்களை திருடிச்சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment