Saturday, November 29, 2014
திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்துள்ள ஆத்துப்பாளையம் ஐ.ஜி.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் புஷ்பராஜ் (42). இவர் இதே பகுதியில் சாயப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் இருந்து ஆர்டரின் பேரில் பெற்று பனியன் ரோல்களுக்கு சாயப்பட்டறையில் சாயமேற்றி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பனியன் ரோல்களுக்கு சாயமிட்டு சாயப்பட்டறையின் முன்புறம் காலி இடத்தில் உள்ள கம்பிகளில் 48 பனியன் ரோல்களை காய போட்டிருந்தார்.
நேற்றுக்காலை வந்து பார்த்தபோது 40 பனியன் ரோல்கள் மட்டுமே இருந்தது. இரவில் யாரோ மர்ம மனிதர்கள் 8 பனியன் ரோல்களை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். சாயப்பட்டறையில் பொருத்தி இருந்த சி.சி.டிவி.கேமராவில் பார்த்தபோது மர்ம நபர்கள் ஒரு காரில் வந்து சென்றது பதிவாகி இருந்தது. இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சாயப்பட்டறையில் காயப்போட்டிருந்த பனியன் ரோல்களை திருடிச்சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...

0 comments:
Post a Comment