Thursday, November 27, 2014
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக்
கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை
பெரியாற்றில் தண்ணீர் 142 அடியை எட்டியதற்கு ஐந்து மாவட்ட மக்கள் பென்னி
குயிக்கிற்கு நன்றி தெரிவித்து பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாநகர அ.தி.மு.க.வினர், முன்னாள் முதல்வர்
ஜெயலலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நேற்று மதுரையில் பொது கூட்டம்
நடத்தினர்.அந்த கூட்டத்தில், அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசும்போது,
''இன்று தென்மாவட்ட மக்கள் மகிழும் வகையில் முல்லைப்பெரியாற்றின் நீர்
வைகையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முழு காரணம் ஜெயலலிதாதான்.
கருணாநிதி இந்தப் பிரச்னைக்காக துரும்பைகூட எடுத்து போடவில்லை. ஆனால்,
இப்போதோ கேரளாவுக்கு நன்மை செய்வது போல அறிக்கைகள் விட்டுக்
கொண்டிருக்கிறார்.

மக்களின் முதல்வர் என்று
ஜெயலலிதாவை நாங்கள் குறிப்பிடுவதை சில ஊடகங்கள் கிண்டல் செய்கின்றன.
மக்கள்தான் ஜெயலலிதாவை முதல்வராக தேர்ந்தெடுத்தவர்கள். ஜெயலலிதா 5
ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டுமென்றுதான் மக்கள் அதிகாரத்தை வழங்கினார்கள்.
இப்போது ஜெயலலிதாவை பதவியிலிருந்து இறக்கியது மக்களா? மக்கள் கொடுத்த
அதிகாரம் இன்னும் ஒன்றரை வருடத்திற்கு உள்ளது.அப்படி என்றால், ஜெயலலிதாவை
மக்களின் முதல்வர் என்று சொல்வதில் என்ன தவறு? நான் சட்டத்திற்குள்
செல்லவில்லை. மக்களின் முதல்வர் என்று சொல்வதை, கிண்டல் செய்ததற்காக இதை
சொல்கிறேன்" என்றார். தொடர்ந்து தமிழக மீனவர் பிரச்சனையில் பெயர் எடுக்க
வேண்டும் என்ற நோக்கத்தோடு வட நாட்டில் இருந்து வந்து தற்போது மத்தியில்
ஆட்சியை பிடித்த கட்சியெல்லாம் மக்கள் செல்வாக்கு இருப்பது போன்ற பிரம்மையை
ஏற்படுத்தி வருகின்றனர்.ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அவை லெட்டர் பேடு
கட்சியாகத்தான் உள்ளது என சாடினார் . அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது,
''ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் மாபெரும் கூட்டத்தை
நடத்தினார்கள். இது நாம் நடத்தும் நன்றி கூட்டம். தாய்க்கு பிள்ளைகள்
எடுக்கும் விழா" என்றார். மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பின்னப்பட்ட
சூழ்ச்சிகளை முறியடித்து தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்பார் என
தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment