Saturday, November 08, 2014
மதுரை கோ.புதூரை சேர்ந்தவர் எஸ்.கருணாநிதி, வக்கீல். மதுரை வக்கீல்கள் சங்க
துணைச்செயலாளரான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள
மனுவில் கூறி இருந்ததாவது:–
ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், ராஜகோபால் ஆச்சாரி, தந்தை பெரியார், அம்பேத்கார், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் உருவப்படங்களை மட்டும் அரசு அலுவலகங்களில் வைத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு புறம்பாக அரசு அலுவலங்களில் ஜெயலலிதா உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஜெயலலிதா முதல்-அமைச்சர் பதவியில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் அவரது உருவப்படங்களை அரசு அலுவலங்களில் வைத்து இருப்பது நியாயமற்றது.
எனவே, அரசு திட்டம் தொடர்பான அறிவிப்பு பலகைகளில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் படங்களை நீக்கவும், அரசு அலுவலங்களில் ஜெயலலிதா படத்தை அகற்றவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலு மணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், வி.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment