Friday, November 21, 2014

மதுரை மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒத்தக்கடையில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறேன். மதுரை மாவட்டத்துடன் 26 ஆய்வுக் கூட்டங்கள் முடிந்தன. இனி அடுத்து தேனி, நீலகிரி, சேலம், தர்மபுரி அதன் பின் தென்சென்னை, வட சென்னையுடன் ஆய்வு கூட்டம் முடிகிறது. இந்த ஆய்வு கூட்டப்பணியை சிறப்பாக செய்தது என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
2011ம் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்த 3 ஆண்டுகளில் ஜெயலலிதா ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் இவை அனைத்தும் ஏட்டளவில் தான் உள்ளன. எந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்து அவருக்கு பதவியும் பறிபோனது. ஜெயலலிதா உத்தரவுப்படி முதல்–அமைச்சராக பன்னீர் செல்வம் பதவி ஏற்று இருக்கிறார். ஆனால் அவர் இன்னும் முதல் அமைச்சர் அறையில் கூட அமரவில்லை. அங்குள்ள பலகையை இன்னும் கூட மாற்றவில்லை.
2006 முதல் 2011ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சி மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா விமர்சித்தார். ஆனால் கருணாநிதி 5 ஆண்டுகள் ஆட்சி செய்து சாதனை படைத்தார். ஆனால் ஜெயலலிதா தற்போது மெஜாரிட்டியாக இருந்தும் பதவியை இழந்து விட்டார். முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பன்னீர் செல்வம் செயல்படாமல் இருக்கிறார்.
காவிரி முல்லைப் பெரியாறு விஷயத்தில் கர்நாடகமும், கேரளாவும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்துள்ளன. ஆனால் தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தை கூட்ட முடியாத நிலையில் பன்னீர் செல்வம் இருக்கிறார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. தினமும் கொலை கொள்ளைகள் தான் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்றால் தலைவர் கலைஞர் தலைமையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தமிழரசி, மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment