Thursday, November 13, 2014

மதுரை மாவட்டடம் மேலூர் பஸ் நிலையம் அருகே அரசு உதவி பெறும் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாயக்கர் தெருவை சேர்ந்த ஒரு மாணவி 6–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தாய் இறந்து விட்டதால் திருமணமான அக்கா பிரியாவின் பராமரிப்பில் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கூடத்திற்கு சென்றவர் திடீரென பாதியிலேயே வீடு திரும்பினார். தன்னை ஆங்கில பாட ஆசிரியர் பாண்டி என்பவர் பாலியல் தொல்லை செய்ததாக தனது அக்காவிடம் கூறினார்.
இந்நிலையில் நேற்று அந்த மாணவியின் வீடு வழியாக ஆசிரியர் பாண்டி சென்றார். அப்போது மாணவியின் அக்கா திடீரென ஆவேசமடைந்து ஆசிரியரை தாக்கினார். அப்போது அருகில் இருந்தவர்களும் ஆசிரியரை தாக்க திரண்டதால் அருகில் இருந்த சிலர் ஆசிரியரை மீட்டு ஒரு வீட்டில் அமர வைத்தனர்.
இது குறித்து மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக்குள் இருந்த ஆசிரியரை வெளியே அழைத்து வந்தனர்
இந்த சம்பவம் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாணவியின் அக்கா பிரியா மேலூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆசிரியர் பாண்டியை கைது செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment