Thursday, November 13, 2014

மதுரை மாவட்டடம் மேலூர் பஸ் நிலையம் அருகே அரசு உதவி பெறும் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாயக்கர் தெருவை சேர்ந்த ஒரு மாணவி 6–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தாய் இறந்து விட்டதால் திருமணமான அக்கா பிரியாவின் பராமரிப்பில் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கூடத்திற்கு சென்றவர் திடீரென பாதியிலேயே வீடு திரும்பினார். தன்னை ஆங்கில பாட ஆசிரியர் பாண்டி என்பவர் பாலியல் தொல்லை செய்ததாக தனது அக்காவிடம் கூறினார்.
இந்நிலையில் நேற்று அந்த மாணவியின் வீடு வழியாக ஆசிரியர் பாண்டி சென்றார். அப்போது மாணவியின் அக்கா திடீரென ஆவேசமடைந்து ஆசிரியரை தாக்கினார். அப்போது அருகில் இருந்தவர்களும் ஆசிரியரை தாக்க திரண்டதால் அருகில் இருந்த சிலர் ஆசிரியரை மீட்டு ஒரு வீட்டில் அமர வைத்தனர்.
இது குறித்து மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக்குள் இருந்த ஆசிரியரை வெளியே அழைத்து வந்தனர்
இந்த சம்பவம் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாணவியின் அக்கா பிரியா மேலூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆசிரியர் பாண்டியை கைது செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment