Thursday, November 13, 2014

மதுரை மாவட்டடம் மேலூர் பஸ் நிலையம் அருகே அரசு உதவி பெறும் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாயக்கர் தெருவை சேர்ந்த ஒரு மாணவி 6–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தாய் இறந்து விட்டதால் திருமணமான அக்கா பிரியாவின் பராமரிப்பில் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கூடத்திற்கு சென்றவர் திடீரென பாதியிலேயே வீடு திரும்பினார். தன்னை ஆங்கில பாட ஆசிரியர் பாண்டி என்பவர் பாலியல் தொல்லை செய்ததாக தனது அக்காவிடம் கூறினார்.
இந்நிலையில் நேற்று அந்த மாணவியின் வீடு வழியாக ஆசிரியர் பாண்டி சென்றார். அப்போது மாணவியின் அக்கா திடீரென ஆவேசமடைந்து ஆசிரியரை தாக்கினார். அப்போது அருகில் இருந்தவர்களும் ஆசிரியரை தாக்க திரண்டதால் அருகில் இருந்த சிலர் ஆசிரியரை மீட்டு ஒரு வீட்டில் அமர வைத்தனர்.
இது குறித்து மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக்குள் இருந்த ஆசிரியரை வெளியே அழைத்து வந்தனர்
இந்த சம்பவம் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாணவியின் அக்கா பிரியா மேலூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆசிரியர் பாண்டியை கைது செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment