Thursday, November 13, 2014

மதுரை மாவட்டடம் மேலூர் பஸ் நிலையம் அருகே அரசு உதவி பெறும் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாயக்கர் தெருவை சேர்ந்த ஒரு மாணவி 6–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தாய் இறந்து விட்டதால் திருமணமான அக்கா பிரியாவின் பராமரிப்பில் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கூடத்திற்கு சென்றவர் திடீரென பாதியிலேயே வீடு திரும்பினார். தன்னை ஆங்கில பாட ஆசிரியர் பாண்டி என்பவர் பாலியல் தொல்லை செய்ததாக தனது அக்காவிடம் கூறினார்.
இந்நிலையில் நேற்று அந்த மாணவியின் வீடு வழியாக ஆசிரியர் பாண்டி சென்றார். அப்போது மாணவியின் அக்கா திடீரென ஆவேசமடைந்து ஆசிரியரை தாக்கினார். அப்போது அருகில் இருந்தவர்களும் ஆசிரியரை தாக்க திரண்டதால் அருகில் இருந்த சிலர் ஆசிரியரை மீட்டு ஒரு வீட்டில் அமர வைத்தனர்.
இது குறித்து மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக்குள் இருந்த ஆசிரியரை வெளியே அழைத்து வந்தனர்
இந்த சம்பவம் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாணவியின் அக்கா பிரியா மேலூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆசிரியர் பாண்டியை கைது செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment