Thursday, November 27, 2014

பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த முறைகேடுகள் தொடர்பாக 77 வழக்குகளை மதுரை கலெக்டர் மேலூர் கோர்ட்டில் நேரடியாக தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகளில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த நிறுவனங்களுக்கு அரசு ‘சீல்’ வைத்ததால் வர்த்தகமும் முற்றிலும் முடங்கின.
இதனிடையே மதுரையில் உள்ள இந்தியன் பாங்கியில் பி.ஆர்.பி. கிரானைட் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் அடமான கடன் வாங்கியதில் ரூ.149 கோடியை முறையாக திருப்பி செலுத்தவில்லை. எனவே அதற்குரிய அடமானம் வைத்த சொத்துக்களை ஏலம் விடுவதாக இந்தியன் வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து இந்தியன் பாங்கி அதிகாரிகள் கூறியதாவது:–
கடந்த 20–ந்தேதி நிலவரப்படி பி.ஆர்.பி. கிரானைட், பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் சார்பில் இந்தியன் பாங்கிக்கு ரூ.149 கோடி கடன் நிலுவை தொகை செலுத்த வேண்டி உள்ளது. இதுகுறித்து பலமுறை நோட்டீசு அனுப்பியும் அந்த தொகையை செலுத்த அவர்கள் முன்வரவில்லை.
எனவே அடமானமாக எழுதி கொடுத்த நிலங்களை கையகப்படுத்தி உள்ளோம். அவற்றை ஏலத்தில் விட்டு கடன் தொகையை ஈடுகட்ட முடிவு செய்துள்ளோம். இதற்காக கோர்ட்டும் அனுமதி அளித்து விட்டதால் ஏலம் விடுவது உறுதியாகி விட்டது.
மதுரை நகர் மற்றும் உத்தங்குடி, வண்டியூர், முகாம்பிகை நகர், இலந்தைகுளம், மேலமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 135 ஏக்கர் நிலங்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் காலிமனைகள் அதிகமாக உள்ளன.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பல பிரிவுகளாக பிரித்து ‘‘இ–டெண்டர்’’ மூலம் ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பையும் முறைப்படி வெளியிட்டுள்ளோம்.
வருகிற டிசம்பர் 31–ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை இதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு ஏலம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பி.ஆர்.பி. நிறுவன சொத்துக்கள் ஏலத்திற்கு வந்துள்ள விவகாரம் மதுரை தொழில் அதிபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment