Thursday, November 27, 2014

இந்த வழக்கில் அவருக்கு, 10.12.2012 அன்று மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. அப்போது, பாஸ்போர்ட்டை மேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பின்பு, ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மேலூர் கோர்ட்டு 3.4.2013 அன்று துரைதயாநிதியிடம் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்தது. அப்போது, வெளிநாடு செல்வதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்பும் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்பின்பு, வெளிநாட்டுக்கு செல்வதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக தகவல் தெரிவித்தால் போதும் என்று நிபந்தனை மாற்றப்பட்டது.
இந்த நிபந்தனையை முழுமையாக தளர்த்தக்கோரி, துரைதயாநிதி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
நான் சினிமா தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதற்காக அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டியது உள்ளது. ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போதும், திரும்பி வந்த பிறகும் கோர்ட்டில் தகவல் தெரிவிப்பதில் சிரமம் உள்ளது. என் மீதான கிரானைட் முறைகேடு வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன். கோர்ட்டு விதித்த அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றி உள்ளேன்.
எனவே, வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்பும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்பும் பயண விவரங்களை மேலூர் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக கீழவளவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment