Friday, November 21, 2014
தாராபுரம் மீனாட்சிபுரத்தில் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதசுவாமி கோவில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தகோவிலில் பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று பிரதோஷம் என்பதால் ஸ்ரீமீனாட்சி சொக்கநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முதலில் சொக்கநாதசுவாமிக்கு எதிரே அமர்ந்துள்ள நந்திக்கு 16 வகையான அபிஷேகமும், அதை தொடர்ந்து சொக்கநாதசுவாமிக்கும் 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பல்வேறு வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டன. ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக உற்சவ மூர்த்திகளான சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை 3 முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது திரளான பக்தர்கள் சாமிதரினம் செய்தனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
இந்திய நாட்டின் 68வது சுதந்திர தின விழாவை யொட்டி திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், ஆணையாளர் மா...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
0 comments:
Post a Comment