Monday, December 01, 2014
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பூளவாடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பூளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு அதிகம் உள்ள இந்த பகுதியில் பஸ் நிலையம், வாரச்சந்தை உள்ளதால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த டாஸ்மாக் கடையை கடந்து செல்ல வேண்டியநிலை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மதுஅருந்தும் குடிமகன்கள் சிலர் போதையில் சாலையோரம் கிடப்பதும், தகாத வார்த்தைகளில் பேசுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை இந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் டாஸ்மாக் கடை அகற்றப்படாத நிலையில் அதனை அகற்றக்கோரி அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும், பூளவாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு காவலர் நியமிக்கக்கோரியும் பூளவாடி நால்ரோட்டில் பா.ஜ.க.வினர் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பூளவாடி கிளை செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். குடிமங்கலம் ஒன்றிய தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் குருசாமி, நாகராஜன், சோமசுந்தரம், ரமேஷ் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment