Monday, December 01, 2014
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பூளவாடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பூளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு அதிகம் உள்ள இந்த பகுதியில் பஸ் நிலையம், வாரச்சந்தை உள்ளதால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த டாஸ்மாக் கடையை கடந்து செல்ல வேண்டியநிலை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மதுஅருந்தும் குடிமகன்கள் சிலர் போதையில் சாலையோரம் கிடப்பதும், தகாத வார்த்தைகளில் பேசுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை இந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் டாஸ்மாக் கடை அகற்றப்படாத நிலையில் அதனை அகற்றக்கோரி அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும், பூளவாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு காவலர் நியமிக்கக்கோரியும் பூளவாடி நால்ரோட்டில் பா.ஜ.க.வினர் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பூளவாடி கிளை செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். குடிமங்கலம் ஒன்றிய தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் குருசாமி, நாகராஜன், சோமசுந்தரம், ரமேஷ் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment