Monday, December 01, 2014
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பூளவாடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பூளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு அதிகம் உள்ள இந்த பகுதியில் பஸ் நிலையம், வாரச்சந்தை உள்ளதால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த டாஸ்மாக் கடையை கடந்து செல்ல வேண்டியநிலை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மதுஅருந்தும் குடிமகன்கள் சிலர் போதையில் சாலையோரம் கிடப்பதும், தகாத வார்த்தைகளில் பேசுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை இந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் டாஸ்மாக் கடை அகற்றப்படாத நிலையில் அதனை அகற்றக்கோரி அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும், பூளவாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு காவலர் நியமிக்கக்கோரியும் பூளவாடி நால்ரோட்டில் பா.ஜ.க.வினர் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பூளவாடி கிளை செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். குடிமங்கலம் ஒன்றிய தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் குருசாமி, நாகராஜன், சோமசுந்தரம், ரமேஷ் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...

0 comments:
Post a Comment