Monday, December 08, 2014
அ.தி.மு.க. தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தலை அமைதியாக நடத்த மக்களின் முதல்வர் அம்மா உத்தரவிட்டுள்ளார். இந்த தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு, பாடுபட்டவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் நமக்குள், போட்டி, பொறாமை வேண்டாம் ஒற்றுமையோடு செயல்பட்டு, கட்சி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.
கட்சிக்காக உழைப்பவர்கள் உயர்ந்த பதவியில் அமரவைத்து அழகு பார்ப்பவர் அம்மா. பதவிகள் முக்கியமல்ல... நிரந்தரமும் அல்ல... அ.தி.மு.க. தொண்டராக இருப்பதே பெருமையான மிகப்பெரிய பதவியாகும்.
மக்களின் முதல்வர் அம்மா மக்களுக்கு செய்த எண்ணற்ற சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. முல்லை பெரியாரில் 142 அடி நீர்மட்டத்தை உயர்த்த பாடுபட்ட மக்களின் முதல்வர் அம்மாவை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள்.
கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் அம்மாவுக்கு நன்றி தெரிவித்து சுவர் விளம்பரங்கள் செய்திட வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்தாமல் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுக்கு பதவிகள் தேடி வரும்.
எனவே அமைப்புத் தேர்தலை அமைதியாகவும், ஒழுங்காகவும் ஒற்றுமை யாகவும் நடத்திட வேண்டும்.
மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் நெல்லை மாவட்ட தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உரிய நேரத்தில் சென்று பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment