Monday, December 08, 2014
அ.தி.மு.க. தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தலை அமைதியாக நடத்த மக்களின் முதல்வர் அம்மா உத்தரவிட்டுள்ளார். இந்த தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு, பாடுபட்டவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் நமக்குள், போட்டி, பொறாமை வேண்டாம் ஒற்றுமையோடு செயல்பட்டு, கட்சி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.
கட்சிக்காக உழைப்பவர்கள் உயர்ந்த பதவியில் அமரவைத்து அழகு பார்ப்பவர் அம்மா. பதவிகள் முக்கியமல்ல... நிரந்தரமும் அல்ல... அ.தி.மு.க. தொண்டராக இருப்பதே பெருமையான மிகப்பெரிய பதவியாகும்.
மக்களின் முதல்வர் அம்மா மக்களுக்கு செய்த எண்ணற்ற சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. முல்லை பெரியாரில் 142 அடி நீர்மட்டத்தை உயர்த்த பாடுபட்ட மக்களின் முதல்வர் அம்மாவை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள்.
கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் அம்மாவுக்கு நன்றி தெரிவித்து சுவர் விளம்பரங்கள் செய்திட வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்தாமல் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுக்கு பதவிகள் தேடி வரும்.
எனவே அமைப்புத் தேர்தலை அமைதியாகவும், ஒழுங்காகவும் ஒற்றுமை யாகவும் நடத்திட வேண்டும்.
மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் நெல்லை மாவட்ட தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உரிய நேரத்தில் சென்று பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment