Monday, December 08, 2014
அ.தி.மு.க. தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தலை அமைதியாக நடத்த மக்களின் முதல்வர் அம்மா உத்தரவிட்டுள்ளார். இந்த தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு, பாடுபட்டவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் நமக்குள், போட்டி, பொறாமை வேண்டாம் ஒற்றுமையோடு செயல்பட்டு, கட்சி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.
கட்சிக்காக உழைப்பவர்கள் உயர்ந்த பதவியில் அமரவைத்து அழகு பார்ப்பவர் அம்மா. பதவிகள் முக்கியமல்ல... நிரந்தரமும் அல்ல... அ.தி.மு.க. தொண்டராக இருப்பதே பெருமையான மிகப்பெரிய பதவியாகும்.
மக்களின் முதல்வர் அம்மா மக்களுக்கு செய்த எண்ணற்ற சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. முல்லை பெரியாரில் 142 அடி நீர்மட்டத்தை உயர்த்த பாடுபட்ட மக்களின் முதல்வர் அம்மாவை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள்.
கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் அம்மாவுக்கு நன்றி தெரிவித்து சுவர் விளம்பரங்கள் செய்திட வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்தாமல் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுக்கு பதவிகள் தேடி வரும்.
எனவே அமைப்புத் தேர்தலை அமைதியாகவும், ஒழுங்காகவும் ஒற்றுமை யாகவும் நடத்திட வேண்டும்.
மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் நெல்லை மாவட்ட தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உரிய நேரத்தில் சென்று பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment