Monday, December 08, 2014
அ.தி.மு.க. தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தலை அமைதியாக நடத்த மக்களின் முதல்வர் அம்மா உத்தரவிட்டுள்ளார். இந்த தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு, பாடுபட்டவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் நமக்குள், போட்டி, பொறாமை வேண்டாம் ஒற்றுமையோடு செயல்பட்டு, கட்சி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.
கட்சிக்காக உழைப்பவர்கள் உயர்ந்த பதவியில் அமரவைத்து அழகு பார்ப்பவர் அம்மா. பதவிகள் முக்கியமல்ல... நிரந்தரமும் அல்ல... அ.தி.மு.க. தொண்டராக இருப்பதே பெருமையான மிகப்பெரிய பதவியாகும்.
மக்களின் முதல்வர் அம்மா மக்களுக்கு செய்த எண்ணற்ற சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. முல்லை பெரியாரில் 142 அடி நீர்மட்டத்தை உயர்த்த பாடுபட்ட மக்களின் முதல்வர் அம்மாவை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள்.
கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் அம்மாவுக்கு நன்றி தெரிவித்து சுவர் விளம்பரங்கள் செய்திட வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்தாமல் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுக்கு பதவிகள் தேடி வரும்.
எனவே அமைப்புத் தேர்தலை அமைதியாகவும், ஒழுங்காகவும் ஒற்றுமை யாகவும் நடத்திட வேண்டும்.
மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் நெல்லை மாவட்ட தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உரிய நேரத்தில் சென்று பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 
 
 
 
0 comments:
Post a Comment