Monday, December 22, 2014
சமையல் எரிவாயு உருளை மானியத்துக்கானபதிவு செய்யும் சிறப்பு முகாமை திருப்பூரில் மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் {ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
சமையல் எரிவாயு உருளை மானியத்தை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு மூலமாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை எண் ஆகியவை சமையல் எரிவாயு விநியோக மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்கள் பல வழிகளிலும் இதற்காக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். தொழில் நகரமான திருப்பூரில் இதற்காக அலைக்கழிக்கப்படும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், தங்கள் வருவாயை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
இதைத் தவிர்க்கும் வகையில் பாரத் எரிவாயு நிறுவனம் சார்பில் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் திட்டத்துக்குப் பதிவு செய்யும் சிறப்பு முகாம் திருப்பூரில் நடைபெற்றது. இம்முகாமை, வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் துணை மேயர் சு.குணசேகரன் ஏற்பாடு செய்து, தொடங்கி வைத்தார். இந்த முகாமில் சமையல் எரிவாயு விநியோக மையத்தின் ஊழியர்கள் நேரடியாக பங்கேற்று மானியத் திட்டத்துக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்தனர்.
இதில், பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரவும் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதன்காரணமாக, ஒரேநாளில் 31-ஆவது வார்டுக்கு உள்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தங்களது பெயரைப் பதிவு செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, மானியத் திட்டத்துக்கான வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் வாலிபாளையம் பள்ளியில் செவ்வாய்க்கிழமை(டிசம்பர் 23) நடைபெற இருப்பதாக துணை மேயர் குணசேகரன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
0 comments:
Post a Comment