Monday, December 22, 2014
சமையல் எரிவாயு உருளை மானியத்துக்கானபதிவு செய்யும் சிறப்பு முகாமை திருப்பூரில் மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் {ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
சமையல் எரிவாயு உருளை மானியத்தை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு மூலமாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை எண் ஆகியவை சமையல் எரிவாயு விநியோக மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்கள் பல வழிகளிலும் இதற்காக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். தொழில் நகரமான திருப்பூரில் இதற்காக அலைக்கழிக்கப்படும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், தங்கள் வருவாயை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
இதைத் தவிர்க்கும் வகையில் பாரத் எரிவாயு நிறுவனம் சார்பில் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் திட்டத்துக்குப் பதிவு செய்யும் சிறப்பு முகாம் திருப்பூரில் நடைபெற்றது. இம்முகாமை, வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் துணை மேயர் சு.குணசேகரன் ஏற்பாடு செய்து, தொடங்கி வைத்தார். இந்த முகாமில் சமையல் எரிவாயு விநியோக மையத்தின் ஊழியர்கள் நேரடியாக பங்கேற்று மானியத் திட்டத்துக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்தனர்.
இதில், பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரவும் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதன்காரணமாக, ஒரேநாளில் 31-ஆவது வார்டுக்கு உள்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தங்களது பெயரைப் பதிவு செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, மானியத் திட்டத்துக்கான வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் வாலிபாளையம் பள்ளியில் செவ்வாய்க்கிழமை(டிசம்பர் 23) நடைபெற இருப்பதாக துணை மேயர் குணசேகரன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
கிருஷ்ணகிரியை அடுத்த தாதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகன் சிவக்குமார் (வயது 28). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணி புரிந்து...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
0 comments:
Post a Comment