Monday, December 22, 2014
சமையல் எரிவாயு உருளை மானியத்துக்கானபதிவு செய்யும் சிறப்பு முகாமை திருப்பூரில் மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் {ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
சமையல் எரிவாயு உருளை மானியத்தை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு மூலமாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை எண் ஆகியவை சமையல் எரிவாயு விநியோக மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்கள் பல வழிகளிலும் இதற்காக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். தொழில் நகரமான திருப்பூரில் இதற்காக அலைக்கழிக்கப்படும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், தங்கள் வருவாயை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
இதைத் தவிர்க்கும் வகையில் பாரத் எரிவாயு நிறுவனம் சார்பில் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் திட்டத்துக்குப் பதிவு செய்யும் சிறப்பு முகாம் திருப்பூரில் நடைபெற்றது. இம்முகாமை, வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் துணை மேயர் சு.குணசேகரன் ஏற்பாடு செய்து, தொடங்கி வைத்தார். இந்த முகாமில் சமையல் எரிவாயு விநியோக மையத்தின் ஊழியர்கள் நேரடியாக பங்கேற்று மானியத் திட்டத்துக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்தனர்.
இதில், பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரவும் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதன்காரணமாக, ஒரேநாளில் 31-ஆவது வார்டுக்கு உள்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தங்களது பெயரைப் பதிவு செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, மானியத் திட்டத்துக்கான வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் வாலிபாளையம் பள்ளியில் செவ்வாய்க்கிழமை(டிசம்பர் 23) நடைபெற இருப்பதாக துணை மேயர் குணசேகரன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
0 comments:
Post a Comment