Monday, December 22, 2014
திருப்பூர் ஊத்துக்குளி சாலையிலுள்ள பனியன் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள், மூலப்பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
திருப்பூர் மண்ணரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி(53). இவர், என்.ஆர்.கே. புரம் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம்போல நிறுவனத்தை பூட்டிச் சென்றார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நிறுவனத்தின் ஜன்னல் வழியாகப் புகை மூட்டம் வெளியேறுவதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாகத்
திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புப் படையினர், 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள், தளவாடப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக, அந்நிறுவன உரிமையாளர் ரத்தினசாமி தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
0 comments:
Post a Comment