Monday, December 22, 2014
திருப்பூர் ஊத்துக்குளி சாலையிலுள்ள பனியன் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள், மூலப்பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
திருப்பூர் மண்ணரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி(53). இவர், என்.ஆர்.கே. புரம் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம்போல நிறுவனத்தை பூட்டிச் சென்றார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நிறுவனத்தின் ஜன்னல் வழியாகப் புகை மூட்டம் வெளியேறுவதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாகத்
திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புப் படையினர், 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள், தளவாடப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக, அந்நிறுவன உரிமையாளர் ரத்தினசாமி தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
கிருஷ்ணகிரியை அடுத்த தாதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகன் சிவக்குமார் (வயது 28). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணி புரிந்து...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
0 comments:
Post a Comment