Monday, December 22, 2014
திருப்பூர் ஊத்துக்குளி சாலையிலுள்ள பனியன் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள், மூலப்பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
திருப்பூர் மண்ணரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி(53). இவர், என்.ஆர்.கே. புரம் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம்போல நிறுவனத்தை பூட்டிச் சென்றார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நிறுவனத்தின் ஜன்னல் வழியாகப் புகை மூட்டம் வெளியேறுவதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாகத்
திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புப் படையினர், 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள், தளவாடப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக, அந்நிறுவன உரிமையாளர் ரத்தினசாமி தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
-
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கா...
0 comments:
Post a Comment