Wednesday, December 31, 2014
கோட்சேவுக்கு சிலை அமைக்க கூடாது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியனின் பிறந்த நாள் விழா, காங்கயம் அருகே உள்ள அவரது பிறந்த ஊரான குங்காருபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலர் கங்கா எஸ்.சக்திவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் கொங்கு ஈஸ்வரமூர்த்தி, வெள்ளக்கோவில் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கலந்து கொண்ட கொமதேக கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களோடு, அரசு ஆக்கப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்திருந்தால், தற்போது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்றிருக்காது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கோட்சேவுக்கு சிலை வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வருகின்றன. கோட்சேவுக்கு சில வைக்கிற முயற்சி முற்றிலும் தவறானது. அதை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்றார்.
இதில், கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவைத் தலைவர் ஆர்.தேவராஜன், கொமதேக மாநில துணைச் செயலர் சக்திகோச் நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
.jpg)
0 comments:
Post a Comment