Wednesday, December 31, 2014
கோட்சேவுக்கு சிலை அமைக்க கூடாது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியனின் பிறந்த நாள் விழா, காங்கயம் அருகே உள்ள அவரது பிறந்த ஊரான குங்காருபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலர் கங்கா எஸ்.சக்திவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் கொங்கு ஈஸ்வரமூர்த்தி, வெள்ளக்கோவில் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கலந்து கொண்ட கொமதேக கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களோடு, அரசு ஆக்கப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்திருந்தால், தற்போது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்றிருக்காது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கோட்சேவுக்கு சிலை வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வருகின்றன. கோட்சேவுக்கு சில வைக்கிற முயற்சி முற்றிலும் தவறானது. அதை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்றார்.
இதில், கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவைத் தலைவர் ஆர்.தேவராஜன், கொமதேக மாநில துணைச் செயலர் சக்திகோச் நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
.jpg)
0 comments:
Post a Comment