Wednesday, December 31, 2014
கோட்சேவுக்கு சிலை அமைக்க கூடாது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியனின் பிறந்த நாள் விழா, காங்கயம் அருகே உள்ள அவரது பிறந்த ஊரான குங்காருபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலர் கங்கா எஸ்.சக்திவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் கொங்கு ஈஸ்வரமூர்த்தி, வெள்ளக்கோவில் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கலந்து கொண்ட கொமதேக கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களோடு, அரசு ஆக்கப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்திருந்தால், தற்போது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்றிருக்காது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கோட்சேவுக்கு சிலை வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வருகின்றன. கோட்சேவுக்கு சில வைக்கிற முயற்சி முற்றிலும் தவறானது. அதை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்றார்.
இதில், கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவைத் தலைவர் ஆர்.தேவராஜன், கொமதேக மாநில துணைச் செயலர் சக்திகோச் நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment