Tuesday, December 30, 2014
சேவூர் அருகே பொங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் டிராக்டர் ஓட்டுநர் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொங்கலூர் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்தவர் துரைசாமி (37). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, புளியம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில்அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, புளியம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், துரைசாமிக்கு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டாதால் அவர் உயிரிழந்ததாகக் கூறியும், மருத்துவர் மீது உரிய நடவடிக்கை, உரிய நிவாரணத் தொகை வழங்கக் வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் பொங்கலூர் புளியம்பட்டி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சேவூர் போலீஸார், வட்டாட்சியர் தேவமனோகரன் உள்ளிட்டோர் சமரசம் பேசினர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கவும், நிவாரணத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment