Tuesday, December 30, 2014
அவிநாசியில் கட்டடத் தொழிலாளியை சம்மட்டியால் அடித்துக் கொலை செய்ததாக, அவரது நண்பரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மேலகாயம்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் தினேஷ்(23). இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் (24), மணிகண்டன் (22). நண்பர்களாகி இவர்கள் மூன்று பேரும், அவிநாசி சீனிவாசபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி, கட்டட வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆனந்த், நூறு ரூபாய் கேட்டு தினேஷிடம் தகராறு செய்தாராம். தினேஷ் பணம் கொடுக்க மறுத்ததால், அவரை ஆனந்த் சம்மட்டியால் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மணிகண்டன் கொடுத்த தகவலின்பேரில் அவிநாசி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, சடலத்தை மீட்டனர். போலீஸார் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment