Tuesday, December 23, 2014
ஊத்துக்குளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாட்டின் நிறைவாக ஆயிரக்கணக்கான உழைப்பாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.
இம்மாநாட்டில் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளராக கே.காமராஜ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இம்மாநாட்டில் மொத்தம் 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், கே.காமராஜ், கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால், பி.ராஜூ, சி.சுப்பிரமணியம், என்.கோபாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.மதுசூதனன், சி.மூர்த்தி, எஸ்.முத்துக்கண்ணன், பி.முத்துசாமி, எஸ்.சுப்பிரமணியம், கே.ரங்கராஜ், ஜி.சாவித்திரி ஆகிய 13 பேர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார். முன்னதாக மூன்றாம் நாளான செவ்வாயன்று காலை பிரதிநிதிகள் விவாதத்திற்கு கே.காமராஜ் தொகுப்புரை ஆற்றினார். மாநில மாநாட்டிற்கு 4 பெண்கள் உள்பட 19 பேர் கொண்ட பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். பிரதிநிதிகள் மாநாட்டின் முடிவில் வரவேற்புக்குழுச் செயலாளர் ஆர்.குமார் நன்றி கூறினார்.
மாபெரும் பேரணி
மாநாட்டின் நிறைவில் ஊத்துக்குளி ஆர்.எஸ். மேம்பாலம் அருகில் இருந்து மாபெரும் பேரணி தொடங்கியது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். விஜயமங்கலம் சாலை வழியாக ஊத்துக்குளி டவுன் தோழர் பி.ராமமூர்த்தி நினைவுத் திடலைச் சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமையில் ஒன்றியக்குழுச் செயலாளர் கை.குழந்தைசாமி வரவேற்றார். தமுஎகச மக்கள் கலைக்குழு, அவிநாசி திடுமம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எஸ்.கே.கொளந்தசாமி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
0 comments:
Post a Comment