Tuesday, December 23, 2014
முதியோர், விதவைகள் உதவித் தொகை நிறுத்தத்தைக் கண்டித்தும், உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து தாலுகா தலைநகரங்களிலும்
ஜனவரி 7ம் தேதி
மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஊத்துக்குளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாட்டின் நிறைவாக ஆயிரக்கணக்கான உழைப்பாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.
இம்மாநாட்டில் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளராக கே.காமராஜ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இம்மாநாட்டில் மொத்தம் 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், கே.காமராஜ், கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால், பி.ராஜூ, சி.சுப்பிரமணியம், என்.கோபாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.மதுசூதனன், சி.மூர்த்தி, எஸ்.முத்துக்கண்ணன், பி.முத்துசாமி, எஸ்.சுப்பிரமணியம், கே.ரங்கராஜ், ஜி.சாவித்திரி ஆகிய 13 பேர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார். முன்னதாக மூன்றாம் நாளான செவ்வாயன்று காலை பிரதிநிதிகள் விவாதத்திற்கு கே.காமராஜ் தொகுப்புரை ஆற்றினார். மாநில மாநாட்டிற்கு 4 பெண்கள் உள்பட 19 பேர் கொண்ட பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். பிரதிநிதிகள் மாநாட்டின் முடிவில் வரவேற்புக்குழுச் செயலாளர் ஆர்.குமார் நன்றி கூறினார்.
மாபெரும் பேரணி
மாநாட்டின் நிறைவில் ஊத்துக்குளி ஆர்.எஸ். மேம்பாலம் அருகில் இருந்து மாபெரும் பேரணி தொடங்கியது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். விஜயமங்கலம் சாலை வழியாக ஊத்துக்குளி டவுன் தோழர் பி.ராமமூர்த்தி நினைவுத் திடலைச் சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமையில் ஒன்றியக்குழுச் செயலாளர் கை.குழந்தைசாமி வரவேற்றார். தமுஎகச மக்கள் கலைக்குழு, அவிநாசி திடுமம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எஸ்.கே.கொளந்தசாமி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment