Wednesday, December 24, 2014
திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் சக்திவேல்(வயது 45). இவர் ஏலச்சீட்டு மற்றும் மாதச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள் பணம் செலுத்தி வந்தனர். பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு காலம் முடிந்தும் சக்திவேல் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன் சக்திவேல் திடீரென்று மாயமானார். இதனால் அவரிடம் பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் சக்திவேலை தேடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சக்திவேலை தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் வைத்து சக்திவேலை நேற்று திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சக்திவேல் 50–க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. சக்திவேல் மீது மேலும் பலர் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள்.
திருப்பூரை அடுத்த லட்சுமி நகரில் வசித்து வருபவர் கோபால் (வயது40). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக வேலை செய்து வருகிறார். இத்துடன் அப்பகுதி மக்களிடம் வாரம் ரூ.100, ரூ.200, ரூ.500 என்ற வகையில் பணம் வசூலித்து தீபாவளிக்கு பலகாரத்துடன் கூடுதலாக பணம் கொடுக்கும் வகையில் பலகார சீட்டு நடத்தி வருகிறார். இந்த நிலையில் கோபாலும் அவரது காம்பவுண்டில் வசித்து வரும் ஜெயகுமார், லட்சுமி, தவமணி, காயத்திரி, சித்ரா உள்பட பலர் பெரியசாமியிடம் பலகார சீட்டுக்கு பணம் கட்டியுள்ளனர்.
ஆனால் பணம் கட்டி 3 மாதம் முடிந்த நிலையில் சீட்டு பணம் திருப்பி தரவில்லை. இது குறித்து பல தடவை கேட்டும் பெரியசாமி தர மறுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல் பலரிடம் ஆயிரக்கணக்கில் மோசடி செய்து பணம் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோபால் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் மலேசியா சென்றார். படப்பிடிப்பில் ...

0 comments:
Post a Comment