Monday, January 12, 2015
திருப்பூரில் இரு வேறு இடங்களில் போலீஸ் போல் நடித்து இருவரிடம் ரூ.30 ஆயிரம் பணம், 3.5 பவுன் தங்க மோதிரங்கள் பறிக்கப்பட்டன.
தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்தவர் நடராஜ் (63). இவர் திருப்பூரில் தென்னம்பாளையம் பகுதியிலுள்ள தனது தம்பி வீட்டுக்குச் செல்ல சனிக்கிழமை இரவு வந்துள்ளார். தொடர்ந்து, தென்னம்பாளையம் நடுநிலைப் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கதக்க நபர் ஒருவர், தன்னை சிபிசிஐடி போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டதுடன், நடராஜ் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க மோதிரங்களை கழற்றி பாக்கெட்டில் போட அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர், நடராஜை சோதனை செய்வது போல அவரது பாக்கெட்டில் இருந்த இரு தங்க மோதிரங்கள், ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அந்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து நடராஜ் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இதேபோல், திருப்பூர் கணக்கம்பாளையம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி(53). இவர் சனிக்கிழமை இரவு திருப்பூர் மேட்டுப்பாளையத்துக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பெருமாநல்லூர் சாலை அண்ணா நகர் பகுதியில் வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 30 வயது மதிக்கதக்க நபர், இவரது வாகனத்தை நிறுத்தியுள்ளார். மேலும், தான் விஜயமங்கலம் காவல் நிலைய பறக்கும் படை காவலர் என அறிமுகம் செய்து கொண்டதுடன் மூர்த்தி அணிந்திருந்த 2 பவுன் தங்க மோதிரத்தை கழற்றி பாக்கெட்டில் போட அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர், அவரை சோதனை செய்வது போல, பாக்கெட்டில் இருந்த 2 பவுன் தங்க மோதிரம், ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அந்த நபர் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து மூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ் விரு சம்பவங்கள் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment