Thursday, January 22, 2015
'ஐ' படத்துக்கு எதிராக திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அப்படத்தில் நடித்த திருநங்கை ஒஜாஸ் ரஜானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஐ' படத்தில் விக்ரம், எமி ஜாக்சன் ஆகியோருடன் திருநங்கை ஒஜாஸ் ரஜானியும் நடித்துள்ளார். இவர் இந்தி திரையுலகில் பிரபலமான ஒப்பனை கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஐ' படத்தில் திருநங்கைகளை தவறாக சித்தரித்துள்ளார் இயக்குநர் ஷங்கர் என்று திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்குநர் ஷங்கர், விக்ரம், சந்தானம் ஆகியோர் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், ஒஜாஸ் ரஜானி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் அவர் கூறியிருப்பது:
"'ஐ' திரைப்படத்தில் எனது கதாப்பாத்திரத்தை இயக்குநர் ஷங்கர் தாழ்த்திக் காட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. சொல்லப்போனால் எனது கதாப்பாத்திரத்தை அவர் நல்ல முறையில் கதையில் வடிவமைத்துள்ளார். கதையில் நான் விக்ரம் கதாப்பாத்திரத்தை காதலிக்க வேண்டும். அந்தக் காதலை எனது இயல்பில் வெளிப்படுத்தும் விதமே படத்திலும் இடம்பெற்றுள்ளது.
அதனால், இந்தப் படத்தை எதிர்த்து யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளதை நினைத்து நாம் பெருமைகொள்ள வேண்டும். தற்போது நான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். ஆகையால், என்னால் நேரில் உங்களிடம் பேச முடியவில்லை. எனது இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு 'ஐ' படத்துக்கு எதிராக போராட்டங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
0 comments:
Post a Comment