Thursday, January 22, 2015
குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகைதரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாதுகாப்புக்காக 'பீஸ்ட்' காரை இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.

டெல்லியில் வருகிற 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா 25 ஆம் தேதி இந்தியா வருகிறார்.
இதனால், டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு வருகைதரும் ஒபாமாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி குண்டுகள் துளைக்காக சொகுசு காருக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
18 அடி நீளமும், எட்டு டன்கள் எடையும் கொண்ட இந்த கார் பிரபலமாக 'பீஸ்ட்' என்றும் அழைக்கப்படுகிறது. இதில் அமைக்கப்பட்டுள்ள ஆர்மர் பிளேட்டுகள் 8 அங்குல அளவு தடிமன் கொண்டதாகும்.
இந்த கார் ஒரு போயிங் 757 விமானத்தின் எடையையும் தாங்கக் கூடிய திறன் வாய்ந்தது. இந்த காரின் டயர்கள் மிக உறுதி வாய்ந்ததவை. டயருக்குள் பிரத்யேகமாக அடைக்கப்பட்டிருக்கும் காற்று எரிபொருள் டேங்க் வெடிப்பதை தடுக்கும் சக்தி வாய்ந்தது.
காருக்கு அடியில் ஆக்ஸிஜன் டேங்கும், தீயை அணைக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் கூட படம் பிடிக்கக் கூடிய நைட் விஷன் கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த காரை அதற்கென பிரத்யேகமாக பயிற்சி பெற்ற சீக்ரட் சர்வீஸ் ஓட்டுநரால் மட்டுமே ஓட்ட முடியும். அதிபர் ஒபாமா பயணிக்க உள்ள இந்த ‘பீஸ்ட்’ காரில் சாட்டிலைட் போன் பொருத்தப்பட்டுள்ளது.
ஒபாமா தனது சொந்த காரையே குடியரசு தின விழாவில் பயன்படுத்த உள்ளதாகவும், எனினும், பாதுகாப்பு கருதி இந்தக் காரை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment