Thursday, January 22, 2015
குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகைதரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாதுகாப்புக்காக 'பீஸ்ட்' காரை இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.

டெல்லியில் வருகிற 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா 25 ஆம் தேதி இந்தியா வருகிறார்.
இதனால், டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு வருகைதரும் ஒபாமாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி குண்டுகள் துளைக்காக சொகுசு காருக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
18 அடி நீளமும், எட்டு டன்கள் எடையும் கொண்ட இந்த கார் பிரபலமாக 'பீஸ்ட்' என்றும் அழைக்கப்படுகிறது. இதில் அமைக்கப்பட்டுள்ள ஆர்மர் பிளேட்டுகள் 8 அங்குல அளவு தடிமன் கொண்டதாகும்.
இந்த கார் ஒரு போயிங் 757 விமானத்தின் எடையையும் தாங்கக் கூடிய திறன் வாய்ந்தது. இந்த காரின் டயர்கள் மிக உறுதி வாய்ந்ததவை. டயருக்குள் பிரத்யேகமாக அடைக்கப்பட்டிருக்கும் காற்று எரிபொருள் டேங்க் வெடிப்பதை தடுக்கும் சக்தி வாய்ந்தது.
காருக்கு அடியில் ஆக்ஸிஜன் டேங்கும், தீயை அணைக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் கூட படம் பிடிக்கக் கூடிய நைட் விஷன் கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த காரை அதற்கென பிரத்யேகமாக பயிற்சி பெற்ற சீக்ரட் சர்வீஸ் ஓட்டுநரால் மட்டுமே ஓட்ட முடியும். அதிபர் ஒபாமா பயணிக்க உள்ள இந்த ‘பீஸ்ட்’ காரில் சாட்டிலைட் போன் பொருத்தப்பட்டுள்ளது.
ஒபாமா தனது சொந்த காரையே குடியரசு தின விழாவில் பயன்படுத்த உள்ளதாகவும், எனினும், பாதுகாப்பு கருதி இந்தக் காரை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment