Wednesday, February 25, 2015
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட்
முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.
இது குறித்து பொது மக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற அவர், மேலூர் பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காணாமல் போன கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் 1995 முதல் 2005 வரை பணிபுரிந்த அதிகாரிகள் பட்டியல், ஒவ்வொரு துறை வாரியான இழப்புகள், உயிர்ப்பலி போன்ற விபரங்களை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
சகாயம் கேட்ட தகவல்களை வருவாய்த்துறை, நில அளவை, பொதுப் பணித்துறை, கனிம வளம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொல்லியல் மற்றும் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். சில துறைகளில் தகவல்களை சேகரிப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி வருகிற மார்ச் மாதத்தில் சகாயம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதனால் வருகிற 28–ந்தேதிக்குள், தகவல்களை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சகாயம் ‘கெடு’ விதித்து உள்ளார்.
சென்னையில் வருகிற 26–ந்தேதி அறிவியல் நகரம் சார்பில் கண்காட்சி நடக்கிறது. இந்த துறையின் அதிகாரியான சகாயம், அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். பின்னர் 27–ந்தேதி மீண்டும் மதுரையில் கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையை சகாயம் தொடங்குவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பொது மக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற அவர், மேலூர் பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காணாமல் போன கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் 1995 முதல் 2005 வரை பணிபுரிந்த அதிகாரிகள் பட்டியல், ஒவ்வொரு துறை வாரியான இழப்புகள், உயிர்ப்பலி போன்ற விபரங்களை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
சகாயம் கேட்ட தகவல்களை வருவாய்த்துறை, நில அளவை, பொதுப் பணித்துறை, கனிம வளம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொல்லியல் மற்றும் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். சில துறைகளில் தகவல்களை சேகரிப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி வருகிற மார்ச் மாதத்தில் சகாயம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதனால் வருகிற 28–ந்தேதிக்குள், தகவல்களை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சகாயம் ‘கெடு’ விதித்து உள்ளார்.
சென்னையில் வருகிற 26–ந்தேதி அறிவியல் நகரம் சார்பில் கண்காட்சி நடக்கிறது. இந்த துறையின் அதிகாரியான சகாயம், அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். பின்னர் 27–ந்தேதி மீண்டும் மதுரையில் கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையை சகாயம் தொடங்குவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
திருச்சி 6.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
0 comments:
Post a Comment