Wednesday, February 25, 2015
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட்
முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.
இது குறித்து பொது மக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற அவர், மேலூர் பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காணாமல் போன கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் 1995 முதல் 2005 வரை பணிபுரிந்த அதிகாரிகள் பட்டியல், ஒவ்வொரு துறை வாரியான இழப்புகள், உயிர்ப்பலி போன்ற விபரங்களை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
சகாயம் கேட்ட தகவல்களை வருவாய்த்துறை, நில அளவை, பொதுப் பணித்துறை, கனிம வளம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொல்லியல் மற்றும் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். சில துறைகளில் தகவல்களை சேகரிப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி வருகிற மார்ச் மாதத்தில் சகாயம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதனால் வருகிற 28–ந்தேதிக்குள், தகவல்களை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சகாயம் ‘கெடு’ விதித்து உள்ளார்.
சென்னையில் வருகிற 26–ந்தேதி அறிவியல் நகரம் சார்பில் கண்காட்சி நடக்கிறது. இந்த துறையின் அதிகாரியான சகாயம், அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். பின்னர் 27–ந்தேதி மீண்டும் மதுரையில் கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையை சகாயம் தொடங்குவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
திருப்பூர், செவந்தம்பாளையம் தடுப்பணையில் கட்டடக் கழிவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்...
-
வியாசர்பாடி மேம்பால பணிகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லை என தெரிகிறது. வியாசர்பாடியில் பழமைவாய்ந்த...
0 comments:
Post a Comment