Wednesday, February 04, 2015
இன்றைய நம் இளைய தலைமுறையினர் நமது வளமான பண்பாட்டு வேர்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். இதுதான் நாம் சந்திக்கும் மிகக் கடுமையான சவால் என்று எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கூறினார்.
12வது திருப்பூர் புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வில், தேசம் போகும் பாதை புதிது..ஆனால்? என்ற தலைப்பில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: இளைஞர்கள், பெண்களின் மூலம்தான் மாற்றங்கள் நிகழ முடியும். ஆனால் இன்றைய இளைஞர்கள் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடியவர்களாக பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த எண்ணங்களும் இல்லை. வெறுமனே வேடிக்கை பார்க்கக்கூடிய கூட்டமாக அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். பொதுக்கூட்டம், அறிவுத்தள விவாதம், அரசியல் தளத்தில் பேசுவதைக் கேட்பதற்கு இன்று காதுகள் இல்லை.
நாட்டின் பொருளாதாரக் கொள்கை, கல்விக் கொள்கையை வகுப்பவர்கள்தான் இதற்குக் காரணம். நம் கல்வி அமைப்பு திறனற்ற தொழிலாளர்களை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இளைஞர்களின் கற்பனைகள் அழிக்கப்பட்டுவிட்டன. வெற்றுத் தகவல்அறிவு பெறுவதால் என்ன பயன்? அதை இன்று கணினியிலேயே தேடிக் கொள்ளலாம். ஆனால் கற்பனை வளம் இல்லாத மனிதன் ஆரோக்கியமாக வளர முடியாது.
வேலையில் இருப்போரும், வேலை இல்லாதவர்களும் என இருதரப்பினருமே பாதுகாப்பற்றவர்களாக உணரும் நிலை தற்போது உள்ளது. வாசிப்பு, பண்பாட்டில் இருந்து இளைய தலைமுறை துண்டிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் இளைஞர் கூட்டத்தை ஏடிஎம் பணம் வழங்கும் தானியங்கி இயந்திரமாக மாற்றிவிட்டோம். ஒரு தேசமே மாபெரும் பைத்தியக்காரர்கள் விடுதியாக இருக்க முடியுமா? பண்பாட்டு மரபில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பெரும் கூட்டத்தை எளிதில் வெறுப்பை நோக்கி திருப்ப முடியும். அதைத்தான் இன்றைய அரசியல் சூழலில் செய்து கொண்டிருக்கின்றனர். இது அவநம்பிக்கை கொள்வதற்கான விசயம் அல்ல. நாம் ஒவ்வொருவரும் நம் மனசாட்சியோடு போராட வேண்டும். இந்த விசயத்தை மாற்ற முன்வர வேண்டும். இவ்வாறு மனுஷ்யபுத்திரன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment