Wednesday, February 04, 2015
இன்றைய நம் இளைய தலைமுறையினர் நமது வளமான பண்பாட்டு வேர்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். இதுதான் நாம் சந்திக்கும் மிகக் கடுமையான சவால் என்று எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கூறினார்.
12வது திருப்பூர் புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வில், தேசம் போகும் பாதை புதிது..ஆனால்? என்ற தலைப்பில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: இளைஞர்கள், பெண்களின் மூலம்தான் மாற்றங்கள் நிகழ முடியும். ஆனால் இன்றைய இளைஞர்கள் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடியவர்களாக பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த எண்ணங்களும் இல்லை. வெறுமனே வேடிக்கை பார்க்கக்கூடிய கூட்டமாக அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். பொதுக்கூட்டம், அறிவுத்தள விவாதம், அரசியல் தளத்தில் பேசுவதைக் கேட்பதற்கு இன்று காதுகள் இல்லை.
நாட்டின் பொருளாதாரக் கொள்கை, கல்விக் கொள்கையை வகுப்பவர்கள்தான் இதற்குக் காரணம். நம் கல்வி அமைப்பு திறனற்ற தொழிலாளர்களை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இளைஞர்களின் கற்பனைகள் அழிக்கப்பட்டுவிட்டன. வெற்றுத் தகவல்அறிவு பெறுவதால் என்ன பயன்? அதை இன்று கணினியிலேயே தேடிக் கொள்ளலாம். ஆனால் கற்பனை வளம் இல்லாத மனிதன் ஆரோக்கியமாக வளர முடியாது.
வேலையில் இருப்போரும், வேலை இல்லாதவர்களும் என இருதரப்பினருமே பாதுகாப்பற்றவர்களாக உணரும் நிலை தற்போது உள்ளது. வாசிப்பு, பண்பாட்டில் இருந்து இளைய தலைமுறை துண்டிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் இளைஞர் கூட்டத்தை ஏடிஎம் பணம் வழங்கும் தானியங்கி இயந்திரமாக மாற்றிவிட்டோம். ஒரு தேசமே மாபெரும் பைத்தியக்காரர்கள் விடுதியாக இருக்க முடியுமா? பண்பாட்டு மரபில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பெரும் கூட்டத்தை எளிதில் வெறுப்பை நோக்கி திருப்ப முடியும். அதைத்தான் இன்றைய அரசியல் சூழலில் செய்து கொண்டிருக்கின்றனர். இது அவநம்பிக்கை கொள்வதற்கான விசயம் அல்ல. நாம் ஒவ்வொருவரும் நம் மனசாட்சியோடு போராட வேண்டும். இந்த விசயத்தை மாற்ற முன்வர வேண்டும். இவ்வாறு மனுஷ்யபுத்திரன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment