Thursday, February 05, 2015
மதுரை அருகே வாடிப்பட்டி பக்கமுள்ள பொம்மபட்டியை சேர்ந்தவர் தினகரன்.
இவரது மனைவி மீனாட்சி. இவருக்கு கடந்த 2013–ம் ஆண்டு மதுரை அரசு
ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த மறுநாளே அந்த குழந்தை
கடத்தப்பட்டது.
இக்குழந்தையை மீட்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கண்டுபிடிக்க முடியாததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 1½ ஆண்டுகளாக தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை திருப்பூரில் ஒரு இடத்தில் வளர்வதாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்று ஒரு ஆண் குழந்தையை மீட்டது.
பின்னர் அந்த குழந்தைக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளர்த்த பெண், குழந்தையை பறிகொடுத்த தினகரன், மீனாட்சி தம்பதியினர் ஆகியோரை போலீசார் அழைத்து சென்றனர்.
அதன் பிறகு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் ஆலோசனைபடி சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் நடராஜன் முன்னிலையில் மீட்கப்பட்ட குழந்தை, தினகரன், மீனாட்சி ஆகியோருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
பின்னர் அந்த ரத்தம் சீலிடப்பட்ட உறையில் வைத்து தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் கோர்ட்டில் வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்
இக்குழந்தையை மீட்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கண்டுபிடிக்க முடியாததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 1½ ஆண்டுகளாக தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை திருப்பூரில் ஒரு இடத்தில் வளர்வதாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்று ஒரு ஆண் குழந்தையை மீட்டது.
பின்னர் அந்த குழந்தைக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளர்த்த பெண், குழந்தையை பறிகொடுத்த தினகரன், மீனாட்சி தம்பதியினர் ஆகியோரை போலீசார் அழைத்து சென்றனர்.
அதன் பிறகு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் ஆலோசனைபடி சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் நடராஜன் முன்னிலையில் மீட்கப்பட்ட குழந்தை, தினகரன், மீனாட்சி ஆகியோருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
பின்னர் அந்த ரத்தம் சீலிடப்பட்ட உறையில் வைத்து தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் கோர்ட்டில் வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment