Thursday, February 05, 2015
மதுரை அருகே வாடிப்பட்டி பக்கமுள்ள பொம்மபட்டியை சேர்ந்தவர் தினகரன்.
இவரது மனைவி மீனாட்சி. இவருக்கு கடந்த 2013–ம் ஆண்டு மதுரை அரசு
ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த மறுநாளே அந்த குழந்தை
கடத்தப்பட்டது.
இக்குழந்தையை மீட்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கண்டுபிடிக்க முடியாததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 1½ ஆண்டுகளாக தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை திருப்பூரில் ஒரு இடத்தில் வளர்வதாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்று ஒரு ஆண் குழந்தையை மீட்டது.
பின்னர் அந்த குழந்தைக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளர்த்த பெண், குழந்தையை பறிகொடுத்த தினகரன், மீனாட்சி தம்பதியினர் ஆகியோரை போலீசார் அழைத்து சென்றனர்.
அதன் பிறகு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் ஆலோசனைபடி சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் நடராஜன் முன்னிலையில் மீட்கப்பட்ட குழந்தை, தினகரன், மீனாட்சி ஆகியோருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
பின்னர் அந்த ரத்தம் சீலிடப்பட்ட உறையில் வைத்து தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் கோர்ட்டில் வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்
இக்குழந்தையை மீட்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கண்டுபிடிக்க முடியாததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 1½ ஆண்டுகளாக தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை திருப்பூரில் ஒரு இடத்தில் வளர்வதாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்று ஒரு ஆண் குழந்தையை மீட்டது.
பின்னர் அந்த குழந்தைக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளர்த்த பெண், குழந்தையை பறிகொடுத்த தினகரன், மீனாட்சி தம்பதியினர் ஆகியோரை போலீசார் அழைத்து சென்றனர்.
அதன் பிறகு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் ஆலோசனைபடி சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் நடராஜன் முன்னிலையில் மீட்கப்பட்ட குழந்தை, தினகரன், மீனாட்சி ஆகியோருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
பின்னர் அந்த ரத்தம் சீலிடப்பட்ட உறையில் வைத்து தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் கோர்ட்டில் வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment