Thursday, February 05, 2015
துரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரணை நடத்தி
வருகிறார். 6–வது கட்ட விசாரணையின் இறுதி நாளான இன்று, தனது முகாம்
அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். அப்போது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையைச் சேர்ந்த நாராயணப்பா என்ற விவசாயி,
சகாயத்திடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–ஓசூர் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பிலான களிமண் மற்றும் மணல் திருட்டுகள் நடந்துள்ளது. இது தொடர்பாக நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். நித்யானந்தா தூண்டுதலின் பேரில் சிலர் என்னை கொலை செய்வதற்காக அவரிடம் ரூ.1 கோடி பெற்றுள்ளார்கள்.
இந்த நிலையில் ஓசூர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான பல கோடி சொத்துக்கள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நீங்கள் (சகாயம்) ஓசூருக்கு வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தி அரசு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் ஐகோர்ட்டில் உள்ள நீதி தேவதை சிலை முன்பு அடுத்த மாதம் 3–ந்தேதி தீக்குளிப்பேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
0 comments:
Post a Comment