Thursday, February 05, 2015
துரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரணை நடத்தி
வருகிறார். 6–வது கட்ட விசாரணையின் இறுதி நாளான இன்று, தனது முகாம்
அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். அப்போது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையைச் சேர்ந்த நாராயணப்பா என்ற விவசாயி,
சகாயத்திடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–ஓசூர் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பிலான களிமண் மற்றும் மணல் திருட்டுகள் நடந்துள்ளது. இது தொடர்பாக நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். நித்யானந்தா தூண்டுதலின் பேரில் சிலர் என்னை கொலை செய்வதற்காக அவரிடம் ரூ.1 கோடி பெற்றுள்ளார்கள்.
இந்த நிலையில் ஓசூர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான பல கோடி சொத்துக்கள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நீங்கள் (சகாயம்) ஓசூருக்கு வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தி அரசு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் ஐகோர்ட்டில் உள்ள நீதி தேவதை சிலை முன்பு அடுத்த மாதம் 3–ந்தேதி தீக்குளிப்பேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment