Thursday, March 26, 2015
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் மற்றும் குறுந்தகடுகள் அறிமுக நிகழ்வை பேராசிரியர் சுந்தரவள்ளி ஒருங்கிணைத்தார். கோவி பாலமுருகுவின் அறிவு தரும் ஏணி, ஸ்ரீரசாவின் துச்சம், ஏகாதசி பாடல்கள், மு.ஈஸ்வரமூர்த்தியின் பேசும் பூக்கள், ரத்தினவேலுவின் வண்ணப்புதுக்குறள் 1100 ஆகிய நூல்களை சுந்தரவள்ளி அறிமுகப்படுத்தினார்.
அதேபோல் சிறுகதை மற்றும் நாவல்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வை மணிமாறன் ஒருங்கிணைத்தார். துறையூர் முருகேசனின் வாண்டுப்பயல் குமார், கோவி பாலமுருகுவின் மோகினி மதகு (சிறுவர் கதைகள்), கழைக்கூத்தாடி, ஜெ.பொன்னுராஜின் பருத்திக்காடு, ந.காவியனின் அன்று இட்ட தீ, வரத. ராஜமாணிக்கத்தின் ஜிங்லி ஆகிய சிறுகதை நூல்களை அவர் அறிமுகப்படுத்தினார்.
கட்டுரைகள் மற்றும் புனைவல்லாத படைப்புகளை வெளியிடும் நிகழ்வை கவிஞர் நா.முத்துநிலவன் ஒருங்கிணைத்தார். முனைவர் த.பரசுராமனின் மொழிகள் அறிந்ததும் அறியாததும், சோலையின் வண்டல் உணவுகள், ஏ.டி.அன்பழகனின் ஒப்புரவாய்...துப்புரவை, ஆவராணி ஆறுமுகத்தின் வெற்றி பெறவே பிறந்தோம், ஆவராணி ஆனந்தனின் வண்ணங்களால் ஆனது வாழ்க்கை, பேரின்பயோகம் எனும் யோகா பாடநூல், விடுதலை ராஜேந்திரனின் மனுதர்ம தந்திரம் ஆகிய நூல்களை அவர் அறிமுகப்படுத்தினார்.
மாநிலத் துணைத் தலைவர் என்.நன்மாறன், நாடகவியலாளர் பிரளயன், திருப்பூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் மிலிட்டரி பொன்னுசாமி, கரிசல் கிருஷ்ணசாமி, பிரேமலதா,
இத்துடன் ஜிவி, ரமா, வெற்றிச்செல்வி சண்முகம், சோலை இசைக்குயில், ஸ்டாலின் சரவணன் ஆகியோரது குறுந்தகடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
மாநாட்டில் பங்கேற்ற சுமார் 20 வயதுடைய இளைய பிரதிநிதிகள் மேடைக்கு அழைக்கப்பட்டு புதிய படைப்புகளை அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
சனியன்று காலை பிரதிநிதிகள் விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் திரைப்படவியலாளர் எம்.சிவக்குமார் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்திப் பேசினார். இடையிடையே கவிதை வாசிப்பு, இசைப் பாடல்கள் என கலாபூர்வமாக மாநாடு நடைபெற்றது.
மாநாடு இன்று நிறைவு (துணைத் தலைப்பு)
நிறைவு நாளான ஞாயிறன்று தொகுப்புரையும், புதிய மாநிலக்குழு, செயற்குழு, நிர்வாகிகள் தேர்வும் நடைபெறுகிறது. மாநில கௌரவத் தலைவர் அருணன் மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றுகிறார். மாலையில் டவுன்ஹால் மைதானத்தில் (பாலுமகேந்திரா அரங்கம்) கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் என்.நன்மாறன், நந்தலாலா, பாரதி கிருஷ்ணகுமார், மதுக்கூர் இராமலிங்கம், கவிஞர் உமா மகேஸ்வரி ஆகியோர் உரையாற்றுகின்றனர். புதுகை பூபாளம் குழுவின் நையாண்டி கச்சேரி, தப்பாட்டம், சிலம்பாட்டம், காவடி ஆட்டம், படுகர் இசை, நவீன நாடகம், கிராமியப் பாடல்கள் இடம் பெறுகின்றன.புதிய படைப்புகளை எழுதிய எழுத்தாளர்கள் மற்றும் வெளியிட்டோர், பெற்றுக் கொண்டோர் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ «ì - 5 Á¼òÐìÌÇõ ¾¡æ측 §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment