Monday, March 02, 2015
அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் குமாரவேல் மண்டையை உடைத்ததாக 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் குமாரவேல் (29). அவர், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில், அவரும், இளைஞர் காவல் படையைச் சேர்ந்த கோபி என்பவரும் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சக்தி தியேட்டர் அருகே குமார் (37), செந்தில்குமார் (39) ஆகிய இருவரும் மது போதையில், அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்தவர்களிடம்தகராறில் ஈடுபட்டனராம். அவர்கள் இருவரையும் வீட்டுக்குச் செல்லுமாறு காவலர் குமாரவேல் கூறினார். மீண்டும் அந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டால், குமாரவேல் அவர்களுடைய இருசக்கர வாகனச் சாவியை எடுத்துக்கொண்டார். அவர்களை காவல் நிலையத்துக்கு வருமாறும் கூறியுள்ளார்.
அதனால், ஏற்பட்ட தகராறில் அந்த இளைஞர்கள் இருவரும் குமாரவேலை தாக்கி, அவரது தலையில் உருட்டுக் கட்டையால் அடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பினர். மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் குமாரவேலை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞர்கள் இருவரையும் தேடிவந்தார். இந்நிலையில், பேருந்து நிலையம் அருகே இருசக்கர வானகத்தில் சென்றுகொண்டிருந்த லாரி புரோக்கரான செந்தில்குமார், கார் ஓட்டுநரான குமார் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment