Friday, March 13, 2015
2016 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக
அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் மாநிலம் முழுவதும், மாவட்ட வாரியாக
பொதுமக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறார். மதுரையில் நடைபெற்ற
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்த அவர் செய்தியாளர்களை
சந்தித்தார் .அப்போது பாமக ஆட்சி பொறுப்பேற்றால் செய்யப்போகிற திட்டங்களை
பட்டியல் இட்டார் .மதுவையும் ஊழலையும் ஒழிப்பதே முதல் லட்சியம் என பேசிய
அவர் சுதந்திர இந்தியாவில் அதிக ஊழல் செய்த கட்சியாக அதிமுக விளங்குகிறது
என சாடினார் .தமிழகத்தில் தான் அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டு
உள்ளதாகவும் மருத்துவர் நியமனத்திற்கு 8 லட்சம் ,ஓட்டுனர் நியமனத்திற்கு 5
லட்சம் ,நடத்துனர் நியமனத்திற்கு 3 லட்சம் செவிலியர் நியமனத்திற்கு 4
லட்சம் வீடு கட்டுவதற்கு 1 சதுர அடிக்கு 80 முதல் 150 ரூபாய் தொகை
வசூலிக்கப் படுவதாகவும் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என அதிமுக ஆட்சியில்
மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை ஊழலே மலிந்துள்ளதாக கூறினார் .நிர்வாகம்
என்பதேசுத்தமாக நடைபெறாத நிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா
விடுதலை ஆக வேண்டும் என யாகம் நடத்துகிறார் அதில் மாவட்ட ஆட்சியர்கள்
பங்கேற்கின்ற ஒரு அவல நிலை தமிழகத்தில் நிலவி வருவதாக குறிப்பிட்டார் .தன்
மீது சாதி சாயல் விழவில்லை என்றும் தன்னை பொது வேட்பாளராக கருதி
காமராஜருக்கு ,அண்ணாவிற்கு ,நடிகருக்கு ,கலைஞருக்கு ஒரு வாய்ப்பு
கொடுத்தது போல் மருத்துவராகிய தனக்கும் தமிழக மக்கள் வாய்ப்பு தருவார்கள்
என நம்பிக்கை தெரிவித்தார் .ஜி கே மணி .வடிவேல் இராவணன் ஆகியோர் உடன்
இருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment