Saturday, March 28, 2015
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள், சாயக் கழிவுநீரால் மாசுபட்ட நிலத்தடி நீரை எடுத்து வந்து ஆட்சியரிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியது:
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையத்தில் இரு பிரிண்டிங் நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. இங்கிருந்து, சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் சாயக் கழிவுநீரால் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனால், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால், ஆழ்துளை கிணறுகளிலும் மாசுபட்ட தண்ணீர் தான் வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் ஏற்கெனவே பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விளைநிலங்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பிரிண்டிங் நிறுவனங்களை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment