Saturday, March 28, 2015
அவசர தேவையின்போது, குறுஞ்செய்தி மூலமாக காவல் துறையின் உதவியை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு திருப்பூர் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அவசர காலங்களில், செல்லிடப்பேசி மூலமாக குறுந்தகவல்களை அனுப்பி காவல் துறையின் உதவி பெறும் வசதியை திருப்பூர் மாநகர காவல்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. அதன்படி, 94876 61100, 94897 71100 ஆகிய செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாக, சம்பந்தப்பட்ட இடத்துக்கு போலீஸார் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மூலமாக தேவையான உதவி அளிக்கப்படும்.
இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்நிலையில், குறுஞ்செய்தி மூலம் காவல் துறை உதவி பெறும் வசதி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் எஸ்.என்.சேஷசாய் உத்தரவிட்டார். அதன்படி, திருப்பூர்
மாநகரில் போலீஸார் வாகனத் தணிக்கை, ரோந்துப் பணியின்போது, குறுஞ்செய்தி மூலம் காவல்துறை உதவியை பெறும் வசதி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் வைத்துள்ள செல்லிடப்பேசியில், குறுஞ்செய்தி அனுப்புவதற்கான காவல் துறை செல்லிடப்பேசி எண்களையும் போலீஸார் பதிந்து தருகின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் ரயில் நிலையப் பகுதியில் திருப்பூர் வடக்குப் போலீஸார் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment