Saturday, March 28, 2015
கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக மாணவர்களிடம் பணம் வசூலிப்பதாக, தனியார் பள்ளி மீது முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்-ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களுக்காக மாணவர்கள் தலா ரூ.1,000 நன்கொடை தர வேண்டுமென பள்ளி நிர்வாகம் சார்பில் கேட்டதாகத் தெரிகிறது. இதன்படி, நன்கொடை செலுத்தாததால் 4-ஆம் வகுப்பு படித்து வரும் திருப்பூர் கோல்டன் நகரைச் சேர்ந்த குமரேசன் என்பவரது மகன் அபினவ், வியாழக்கிழமை நடைபெற்ற ஆங்கிலத் தேர்வை எழுத அனுமதி மறுக்கப்பட்டதாம்.
இதனால், ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் சிலர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனிடம் இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை முறையிட்டனர்.
அப்போது அவர்கள் அளித்த மனுவில், "ஏற்கெனவே அப்பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக ரூ.1,000 செலுத்தக் கூறினர். அந்தத் தொகையைச் செலுத்த முடியாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுக்கின்றனர். இதுதொடர்பாக உரிய பதிலையும் பள்ளி நிர்வாகம் தெரிவிப்பதில்லை. இந்தப் பிரச்னையில் கல்வித் துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், இப் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment