Friday, April 24, 2015
உடுமலை, : அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மே 2ம் தேதி இந்த ஆண்டின் கரும்பு அரவை துவங்கப்பட உள்ளது. முன்னதாக நேற்று காலை 10 மணிக்கு ஆலை வளாகத்தில் இளஞ்சூடு ஏற்றுவிழா நடைபெற்றது. விழாவிற்கு மேலாண்மை இயக்குனர் இந்துமதி தலைமை தாங்கினார். அலுவலக மேலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். சண்முகவேலு எம்.எல்.ஏ கலந்து கொண்டு இளஞ்சூடு ஏற்று விழாவை துவக்கி வைத்தார்.
இந்த ஆண்டில் அமராவதி சர்க்கரை ஆலையில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரவை முடிந்த பின்னர் வெளி மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் டன் கொள்முதல் செய்து அரவை பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அமராவதி அணை, புறந்தலாறு ஆகிய பாசனப்பகுதிகளில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது.
குறிப்பாக கொமரலிங்கம், மடத்துகுளம், தாராபுரம், பழநி, நெய்க்காரன்பட்டி, பல்லடம் ஆகிய பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. விழாவில் தலைமை பொறியாளர் கமல் பிரசாத், தலைமை ரசாயனர் சம்பத்குமார், கரும்பு பிரிக்கும் அலுவலர் ரவிச்சந்திரன்,அமராவதி கூட்டுறவு சர்க்கரை நிர்வாக குழு தலைவர் சின்னப்பன், உறுப்பினர்கள் வேலுச்சாமி, ஈஸ்வரன், சாமுராயப்பட்டி ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு அரவைக்காக 814 புதிய விவசாயிகள் கரும்பு கொள்முதல் செய்ய பதிவு ெசய்துள்ளனர்.
இந்த ஆண்டில் அமராவதி சர்க்கரை ஆலையில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரவை முடிந்த பின்னர் வெளி மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் டன் கொள்முதல் செய்து அரவை பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அமராவதி அணை, புறந்தலாறு ஆகிய பாசனப்பகுதிகளில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது.
குறிப்பாக கொமரலிங்கம், மடத்துகுளம், தாராபுரம், பழநி, நெய்க்காரன்பட்டி, பல்லடம் ஆகிய பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. விழாவில் தலைமை பொறியாளர் கமல் பிரசாத், தலைமை ரசாயனர் சம்பத்குமார், கரும்பு பிரிக்கும் அலுவலர் ரவிச்சந்திரன்,அமராவதி கூட்டுறவு சர்க்கரை நிர்வாக குழு தலைவர் சின்னப்பன், உறுப்பினர்கள் வேலுச்சாமி, ஈஸ்வரன், சாமுராயப்பட்டி ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு அரவைக்காக 814 புதிய விவசாயிகள் கரும்பு கொள்முதல் செய்ய பதிவு ெசய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
CANPAL ACTIHITY AINBOF ALL INDIA GENERAL SECRETARY GV.MANINARAN DIRECTED TO ...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜி...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
0 comments:
Post a Comment