Wednesday, April 15, 2015
அனுப்பர்பாளையம், : சேவூர் அருகே மளிகை கடை வியாபாரியிடம் மிளகாய் பொடிதூவி நூதனமுறையில் வழிப்பறி செய்த பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவிநாசி ஒன்றியம் வேட்டுவபாளையம் ஊராட்சி அசநல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(35). இவர் சேவூர் அசநல்லிபாளையம் சாலையில் புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு மனைவி சங்கீதாவுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே டூவீலரில் வந்த 2 நபர்கள் முத்துசாமியை வழிமறித்தனர். வண்டியை நிறுத்துவதற்குள் முத்துசாமி, சங்கீதா மீது பைக்கில் வந்தவர்கள் மிளகாய் பொடியைத் தூவினர். கண்ணில் எரிச்சலுடன் முத்துசாமியும், சங்கீதாவும் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். ஆனாலும் முத்துசாமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். சங்கீதா சத்தம் போட்டுக் கொண்டே நகைகளை கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டதால் 9 பவுன் தாலிக்கொடி தப்பியது. சேவூர் போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை நடத்தினர். நகை பறிப்பில் ஈடுபட்டது சேவூரில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் அவினாசி காமராஜ் நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் மருதாசலம் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது எதிரே டூவீலரில் வந்த 2 நபர்கள் முத்துசாமியை வழிமறித்தனர். வண்டியை நிறுத்துவதற்குள் முத்துசாமி, சங்கீதா மீது பைக்கில் வந்தவர்கள் மிளகாய் பொடியைத் தூவினர். கண்ணில் எரிச்சலுடன் முத்துசாமியும், சங்கீதாவும் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். ஆனாலும் முத்துசாமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். சங்கீதா சத்தம் போட்டுக் கொண்டே நகைகளை கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டதால் 9 பவுன் தாலிக்கொடி தப்பியது. சேவூர் போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை நடத்தினர். நகை பறிப்பில் ஈடுபட்டது சேவூரில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் அவினாசி காமராஜ் நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் மருதாசலம் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment