Wednesday, April 15, 2015
அனுப்பர்பாளையம், : சேவூர் அருகே மளிகை கடை வியாபாரியிடம் மிளகாய் பொடிதூவி நூதனமுறையில் வழிப்பறி செய்த பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவிநாசி ஒன்றியம் வேட்டுவபாளையம் ஊராட்சி அசநல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(35). இவர் சேவூர் அசநல்லிபாளையம் சாலையில் புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு மனைவி சங்கீதாவுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே டூவீலரில் வந்த 2 நபர்கள் முத்துசாமியை வழிமறித்தனர். வண்டியை நிறுத்துவதற்குள் முத்துசாமி, சங்கீதா மீது பைக்கில் வந்தவர்கள் மிளகாய் பொடியைத் தூவினர். கண்ணில் எரிச்சலுடன் முத்துசாமியும், சங்கீதாவும் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். ஆனாலும் முத்துசாமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். சங்கீதா சத்தம் போட்டுக் கொண்டே நகைகளை கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டதால் 9 பவுன் தாலிக்கொடி தப்பியது. சேவூர் போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை நடத்தினர். நகை பறிப்பில் ஈடுபட்டது சேவூரில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் அவினாசி காமராஜ் நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் மருதாசலம் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது எதிரே டூவீலரில் வந்த 2 நபர்கள் முத்துசாமியை வழிமறித்தனர். வண்டியை நிறுத்துவதற்குள் முத்துசாமி, சங்கீதா மீது பைக்கில் வந்தவர்கள் மிளகாய் பொடியைத் தூவினர். கண்ணில் எரிச்சலுடன் முத்துசாமியும், சங்கீதாவும் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். ஆனாலும் முத்துசாமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். சங்கீதா சத்தம் போட்டுக் கொண்டே நகைகளை கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டதால் 9 பவுன் தாலிக்கொடி தப்பியது. சேவூர் போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை நடத்தினர். நகை பறிப்பில் ஈடுபட்டது சேவூரில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் அவினாசி காமராஜ் நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் மருதாசலம் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
0 comments:
Post a Comment