Friday, April 10, 2015
உடுமலை,:. பிஏபி பிரதான கால்வாயில் ஸ்லேப்புகள் உடைந்து அதன் வழியாக தண்ணீர் கசிந்து விரயமாகிறது. எனவே கால்வாயை உடனே சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிஏபி பாசனத்திட்ட அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 90 அடி நீர்மட்டம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏறத்தாழ 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பிஏபி பிரதான கால்வாய் மூலம் 9 மாதத்துக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் மண்டல வாரியாக பாசனம் நடைபெறுகிறது. தற்போது 3ம் மண்டல பாசனம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், பிரதான கால்வாய் சில இடங்களில் சேதமடைந்துள்ளது. அணையில் இருந்து 12வது கி.மீட்டர் தூரத்தில் மொடக்குப்பட்டி பகுதியில் இருந்து 5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்காங்கே கால்வாய் கரையில் ஸ்லாப்புகள் பெயர்ந்து கிடக்கின்றன. கரையும் சேதமடைந்துள்ளது. அதன் வழியாக தண்ணீர் கசிந்து விரயமாகிறது. கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் உள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணல் மூட்டை அடுக்கி கால்வாய் மேலும் உடையாதவாறு காப்பதோடு பாசனம் முடிந்ததும் உடனே கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்நிலையில், பிரதான கால்வாய் சில இடங்களில் சேதமடைந்துள்ளது. அணையில் இருந்து 12வது கி.மீட்டர் தூரத்தில் மொடக்குப்பட்டி பகுதியில் இருந்து 5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்காங்கே கால்வாய் கரையில் ஸ்லாப்புகள் பெயர்ந்து கிடக்கின்றன. கரையும் சேதமடைந்துள்ளது. அதன் வழியாக தண்ணீர் கசிந்து விரயமாகிறது. கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் உள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணல் மூட்டை அடுக்கி கால்வாய் மேலும் உடையாதவாறு காப்பதோடு பாசனம் முடிந்ததும் உடனே கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
0 comments:
Post a Comment