Friday, April 10, 2015
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளனர்.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: திருப்பூர் மாவட்ட மக்களுக்கு ஏற்படும் நோய்களின் அறிகுறிகள் குறித்து கண்டறிவதற்காக, அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட மண்டல நோய் கண்டறியும் மையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதில் விலை உயர்ந்த நவீன மருத்துவ பரிசோதனைக் கருவிகள் பொருத்தப் பட்டு, மக்கள் முழு உடல் பரிசோனை செய்து கொ ள்ள ரூ.250 என நிர்ணயம் செய்யப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் என அரசு அறிவித்து, தற்போது மருத்துவ கருவிகளை இயக்குவதற்கான அலுவலர், நோய் தன்மை கண்டறியும் நிபுணர்கள் இல்லாததால் பல மாதங்களாக செயல்படாமல் மூடி முடங்கி கிடக்கிறது.
இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், நோய் தன்மை குறித்து அறிந்து கொள்ள முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடிச் சென்று அதிக கட் டணம் செலுத்த இயலா மல், பரிசோதனையும் செய்யாமல் நோய்க்கு ஆளாகி உயிரிழப்பு ஏற்ப டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.எனவே உரிய அலுவலர்களை நியமித்து, உடனடியாக முழு உடல் பரிசோதனைக் கூடத்தை செயல் படுத்துக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசு மருத்துவமனை முன் மா பெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இவ்வ £று தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...

0 comments:
Post a Comment