Friday, April 10, 2015
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளனர்.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: திருப்பூர் மாவட்ட மக்களுக்கு ஏற்படும் நோய்களின் அறிகுறிகள் குறித்து கண்டறிவதற்காக, அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட மண்டல நோய் கண்டறியும் மையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதில் விலை உயர்ந்த நவீன மருத்துவ பரிசோதனைக் கருவிகள் பொருத்தப் பட்டு, மக்கள் முழு உடல் பரிசோனை செய்து கொ ள்ள ரூ.250 என நிர்ணயம் செய்யப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் என அரசு அறிவித்து, தற்போது மருத்துவ கருவிகளை இயக்குவதற்கான அலுவலர், நோய் தன்மை கண்டறியும் நிபுணர்கள் இல்லாததால் பல மாதங்களாக செயல்படாமல் மூடி முடங்கி கிடக்கிறது.
இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், நோய் தன்மை குறித்து அறிந்து கொள்ள முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடிச் சென்று அதிக கட் டணம் செலுத்த இயலா மல், பரிசோதனையும் செய்யாமல் நோய்க்கு ஆளாகி உயிரிழப்பு ஏற்ப டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.எனவே உரிய அலுவலர்களை நியமித்து, உடனடியாக முழு உடல் பரிசோதனைக் கூடத்தை செயல் படுத்துக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசு மருத்துவமனை முன் மா பெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இவ்வ £று தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment