Friday, April 24, 2015
திருப்பூர், : திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்ரமணியராஜா கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு நடத்தும் 2015-16ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 24ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாமில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் 16 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி முகாமில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும்.
மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். வளைகோல் பந்துக்கான பயிற்சி முகாம் உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியிலும், தடகளம், கூடைபந்து, கையுந்து பந்து, கால்பந்து ஆகிய போட்டிகளுக்கான பயிற்சி முகாம் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் மே 14ம் தேதி வரை 21 நாட்கள் நடக்கிறது. பயிற்சியின் போது மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். வளைகோல் பந்துக்கான பயிற்சி முகாம் உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியிலும், தடகளம், கூடைபந்து, கையுந்து பந்து, கால்பந்து ஆகிய போட்டிகளுக்கான பயிற்சி முகாம் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் மே 14ம் தேதி வரை 21 நாட்கள் நடக்கிறது. பயிற்சியின் போது மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
உடுமலை,: உடுமலை துணை மின் நிலையத்தில் நாளை(25ம் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அந்த மின் நிலையத்துக்குட்பட்ட உடுமலை நகர், பழ...
-
காஷ்மீரில் அமைதி திரும்பஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தேசிய அளவில...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
0 comments:
Post a Comment