Friday, April 10, 2015
இத்தாலிய நகரமான மிலனில் உள்ள நீதி அரண்மனை என்று அழைக்கப்படும் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நீதிபதி ஒருவரும், வழக்கறிஞர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டினை, மோசடி மற்றும் திவால் வழக்கு ஒன்றின் பிரதிவாதியே நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், அந்த நீதிமன்ற விளாகத்தில் தஞ்சம் புகுந்து இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பியோடியதாகவும் இத்தாலிய உள்துறை அமைச்சர் ஏஞ்சலீனோ அல்ஃபானோ கூறினார்.
பின்னர் மிலனின் வடக்கு பகுதியில் அந்த துப்பாக்கிதாரி பிடிக்கபட்டதாகத் தெரிகிறது.
நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சூழலில் அங்கிருந்து வழங்கறிஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் வெளியேற்றப்பட்ட பிறகு அவர்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் இறங்கி ஓடினர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறினர்.
துப்பாக்கிதாரியை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டபோது, மூன்றாவதாக இறந்து போன ஒருவருடைய சடலம் கிடைக்கப் பெற்றதாகவும் , ஆனால் அவர் எப்படி இறந்தார் எனத்தெளிவாகத் தெரியவில்லை எனவும் இத்தாலிய ஊடகம் ஒன்று கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment