Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    
டிவிட்டரில் நேற்று முன்தினம் செய்தியாளர்யாளர்கள் சந்திப்பின்போது மைக்க தூக்கி அடிச்சிருவேன் என்று சொன்ன வசனம் தற்போது டிவிட்டரில் கலக்கி வருகிறது.
 
நேற்று முன்தினம் திங்கட்கிழமை [27-04-15] அன்று மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்சனைகள் குறித்து டெல்லி சென்ற தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.
 

 
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. செய்தியாளர்கள் கேள்விகளுக்கு விஜயகாந்த் பதிலளித்துகொண்டிருந்தார். அப்போது பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் கேள்விகளை கேட்டார். இதனால் திடீரென்று கோபமடைந்த விஜயகாந்த், உங்களுக்கு கொம்பா முளைச்சிருக்கு என்று கூறினார்.
 
ஆனாலும் மீண்டும் விடாப்பிடியாக் அந்த நிருபர் கேள்விகளை கேட்க, ’நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ திரும்ப திரும்ப அதையே கேட்டுக்கிட்டு இருக்கியே என்றும், சொன்னதை கேட்கா விட்டால் மைக்கை தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க’ என்றார். இந்த வசனம் தற்போது ட்விட்டரில் கலக்கி வருகிறது.

0 comments: