Tuesday, October 13, 2015

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் தனியார் மெட்ரிக் உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாணவ–மாணவிகளை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சொந்தமாக வேன் உள்ளது. இன்று காலை பள்ளி வேன் வழக்கமாக மாணவ–மாணவிகளை அழைத்துவர புறப்பட்டது. வேனை சிவஞானம் என்பவர் ஓட்டினார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பொய்யாங் குளத்துக்கு சென்ற வேன் அங்கிருந்து 70–க்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.
நேற்று இரவு அப்பகுதியில் மழை பெய்திருந்ததால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது. எனவே டிரைவர் மெதுவாக வேனை ஓட்டி வந்தார். பொய்யாங்குளம் பகுதியில் உள்ள குறுகிய சாலையில் வந்தபோது ஈரமாக இருந்த மண் சரிந்தது. இதில் வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் உள்ளே இருந்த மாணவ–மாணவிகள் 38–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கூக்குரலிட்ட அவர்களை அப்பகுதியினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தாசில்தார் ரெங்கசாமி மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment